Skip to main content

காந்தியின் கையெழுத்திட்ட புகைப்படத்திற்கு அமெரிக்காவில் அதிக மவுசு!

Published on 09/03/2018 | Edited on 09/03/2018

காந்தியின் கையெழுத்திட்ட புகைப்படம் அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.27 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது.

 

Gandhi

 

இந்தியாவில் அரசியல் சாசன சீர்திருத்தங்கள் மற்றும் சுதந்திரம் கோருவதற்கான வட்டமேசை மாநாடு 1930 முதல் 1932 வரை லண்டனில் மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் 1931ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது அமர்வில் மகாத்மா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த மதன்மோகன் மால்வியா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு இந்த இருவரும் வெளியே நடந்துவருவது மாதிரியான இந்த புகைப்படத்தில், எம்.கே.காந்தி என மகாத்மா காந்தி கையெழுத்திட்டுள்ளார்.

 

இந்தப் புகைப்படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், தனது கட்டை விரல் காரணமாக மகாத்மா காந்தி இடதுகைப் பழக்கத்திற்கு மாறியிருந்த சமயத்தில் கையெழுத்திடப்பட்ட புகைப்படம் என்பதாகும். ‘20ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த மகாத்மா காந்திக்கு இவ்வளவு மவுசு இந்தக் காலகட்டத்திலும் இருப்பதில் ஆச்சர்யப்பட எதுவுமில்லை’ என ஏலம் நடத்தியவர் தெரிவித்துள்ளார்.

 

இந்த ஏல நிகழ்வில் கார்ல் மார்க்ஸ் எழுதிய ’ரெவிலேஷன்’ கடிதங்களின் நகல்கள், எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய அறிவுரைக் கடிதம் போன்றவையும் நல்ல விலைக்கு ஏலம் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சார்ந்த செய்திகள்

Next Story

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி காங்கிரஸ் சார்பில் மரியாதை (படங்கள்)

Published on 30/01/2024 | Edited on 30/01/2024

 

 

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி இன்று (30-01-24) சென்னை சத்தியமூர்த்தி பவனில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை செய்தார். இதனையடுத்து அங்கு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. 

Next Story

திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Acceptance of religious harmony pledge on behalf of DMK

நமது நாட்டின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 77வது நினைவு தினம் இன்று (30.01.2024) நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் மோடி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் பல்வேறு இடங்களில் மத நல்லிணக்க உறுதிமொழிகளும் ஏற்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர். அதே போன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.

முன்னதாக கடந்த 28 ஆம் தேதி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிவிப்பில், ஜனவரி 30 ஆம் தேதி மத நல்லிணக்க உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத நல்லிணக்க உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். உறுதிமொழி ஏற்பில் அனைத்து மதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற தமிழ்நாட்டின் மாண்பை இந்திய ஒன்றியத்திற்கு வெளிப்படுத்துவோம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.