Skip to main content

கரோனாவுக்கு சிகிச்சை அளித்த பெண் மருத்துவரிடம் காதலை சொன்னரா இளைஞர்..?

Published on 30/05/2020 | Edited on 31/05/2020
hj


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 60 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 4000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. 

இந்நிலையில் எகிப்து நாட்டில், கரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தனக்கு சிகிச்சையளித்த பெண் மருத்துவரை காதலிப்பதாக கூறி அவருக்கு மோதிரம் அணிவித்ததாக கூறி இணையதளங்கில் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் இருக்கும் இருவருக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது ஃபிரி வெட்டிங் போட்டோ சூட் நடத்தியதும் தற்போது தெரியவந்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்