Skip to main content

ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டனர்! - சுஷ்மா ஸ்வராஜ் தகவல்

Published on 20/03/2018 | Edited on 20/03/2018

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினரால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொலை செய்யப்பட்டு விட்டதாக சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். 

 

Sushma

 

ஈராக் நாட்டில் உள்ள மொசூல் நகரில் இந்தியாவைச் சேர்ந்த 39 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்றதாக தகவல்கள் வெளியாகின. அதன்பின்னர் அவர்கள் என்னவாகினர் என்ற தகவல்கள் கிடைக்கவேயில்லை. அதைத்தொடர்ந்து ஹர்ஜித் என்பவர், தான் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி வந்தவன் என்றும், கடத்தப்பட்ட 39 இந்தியர்களையும் தீவிரவாதிகள் கொன்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.

 

ஆனால், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ‘கடத்தப்பட்டவர்கள் கொல்லப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அவர்களை மீட்பதற்கான எல்லா வேலைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது’ என தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்றுவிட்டதாக நாடாளுமன்றத்தில் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியாவிற்குக் கொண்டுவருவதற்கான வேலைகளிலும் அரசு ஈடுபட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

திருமண நிகழ்ச்சியில் தீ விபத்து -100 பேர் உயிரிழப்பு

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

fire at wedding ceremony

 

திருமண நிகழ்ச்சி ஒன்றில் திடீரென திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் உயிரிழந்த சம்பவம் ஈராக்கில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள அல் ஹம்தனியா நகரத்தில் தடபுடலாக திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி நூறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

 

Next Story

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு; ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தொடர்பில் ஷரீக்; விசாரணையில் அதிர்ச்சி

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

 Mangalore cooker incident; Shariq in relation to IS terrorists; Shocked at the trial

 

கர்நாடகா மாநிலத்தின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள மங்களூருவில் 19/11/2022 அன்று மாலை ஒரு ஆட்டோ திடீரென வெடித்துச் சிதறியது. ஆட்டோவில் இருந்த இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

இந்தச் சம்பவம் தொடர்பாக கர்நாடகா மாநிலக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், தேசிய புலனாய்வு துறையின் அதிகாரிகளும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இது குறித்து கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் தனது ட்விட்டர் பக்கத்தில், "இப்போது உறுதியாகி விட்டது. நேற்று நடந்த ஆட்டோ வெடிப்பு எதிர்பாராத விதமாக நடந்த வெடி விபத்து இல்லை. கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடந்த 'பயங்கரவாதச் செயல். இந்த விவகாரத்தில் கர்நாடக மாநிலக் காவல்துறையினர், மத்திய அமைப்புகளுடன் இணைந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

 

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தடயவியல் துறையினர் முக்கிய ஆதாரங்கள் சேகரித்தனர். அங்கு ஆட்டோவுக்குள் எரிந்த நிலையில், குக்கர் ஒன்றும் சில பேட்டரிகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் காரணமாக அங்குப் பதற்றமான சூழல் உருவாகியதை அடுத்து அப்பகுதி முழுவதையும் காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். 

 

சம்பந்தப்பட்ட ஆட்டோவில் பயணித்த ஷரீக்கிற்கு நீலகிரி மாவட்டம் உதகையைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவர் சிம்கார்டு வாங்கிக் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அந்த நபரைப் பிடித்து தமிழகக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஷரீக் நாகர்கோவிலில் துரித உணவகத்தில் வேலை பார்க்கும் அஜிம் ரகுமான் என்பவருடன் செல்போனில் பேசியது தெரிய வந்தது. ஷரீக் மற்றும் அஹிம் ரகுமான் இடையே ஏற்கனவே தொடர்பு உள்ளதா என்றும் செல்போனில் என்ன பேசி இருப்பார்கள் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

 

மேலும், என்ஐஏ அதிகாரிகளின் விசாரணையில் ஷரீக் ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் நேரடித் தொடர்பில் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் குக்கர் வெடிகுண்டுடன் வீடியோக்களை வெளியிட்டு பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பேசியது தெரியவந்துள்ளது. குண்டு வெடிப்பிற்கு முன்னதாக ஷரீக் ஒத்திகை பார்த்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.