Skip to main content

ஆண் நண்பருடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்; போலீஸ் விசாரணை

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

women incident in sriperumbudur police investigation 

 

இரு வாலிபர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் காவலன் செயலி வாயிலாக இளம் பெண் புகார் தெரிவித்துள்ளார்.

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொழில் பூங்காவில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவர், இரு நாட்களுக்கு முன்பு தனது ஆண் நண்பருடன் உணவு சாப்பிட்டுவிட்டு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின் தொடர்ந்து வந்த இரு வாலிபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி, வடமங்கலம் செல்லும் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாரில் தெரிவித்து  உள்ளார்.

 

புகாரைப் பெற்றுக்கொண்ட  போலீசார் அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதுடன், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு இரு வாலிபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். இது தொடர்பாக அப்பெண்ணின் ஆண் நண்பர் மற்றும் சந்தேகத்தின் பேரில் இரு வாலிபர்களிடமும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

மிகப்பெரிய தொழிற்சாலைகள் உள்ள பகுதி, பாதுகாப்பு நிறைந்த பகுதி, உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் வெளியூர் தொழிலாளர்கள் என எப்போதும் ஆட்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் பகுதி, கண்காணிப்பு கேமரா வசதிகளுடன் காணப்படும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழில் பூங்காவில் நடைபெற்ற  இச்சம்பவத்தால் அப்பகுதியில் பணியாற்றும் பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பர பரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்