Skip to main content

அமைச்சர் கடம்பூர் ராஜுவால் மிரட்டப்பட்ட பறக்கும்படை அதிகாரிக்கு டிரான்ஸ்பர்! – தேர்தல் ஆணையம் இழைத்த அநீதி!

Published on 14/03/2021 | Edited on 14/03/2021
 Transfer to flying officer threatened by Minister Kadampur Raju! - Injustice committed by the Election Commission!

 

கடந்த 12-ஆம் தேதி நக்கீரன் இணையத்தில் “பத்து நாளைக்குத்தான ஆடுவ! அப்புறம் என்ன பண்ணுறேன் பாரு!” -தேர்தல் பறக்கும் படையை மிரட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜு! என்னும் தலைப்பில், வாகன சோதனையில் ஈடுபட்ட  நேர்மையான  அதிகாரி அமைச்சரால் அவமானப்படுத்தப்பட்டு,  நாலாட்டின் புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம்.

 

இந்நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜு மீது புகார் அளித்த கோவில்பட்டி பறக்கும்படை குழுத்தலைவர் மாரிமுத்து, விளாத்திகுளத்துக்கு ‘டிரான்ஸ்பர்’ செய்யப்பட்டுள்ளார்.

 Transfer to flying officer threatened by Minister Kadampur Raju! - Injustice committed by the Election Commission!

 

இதுகுறித்து நம்மைத் தொடர்புகொண்ட பறக்கும்படையினர், “இதெல்லாம் கொடுமைங்க. திட்டியதும் மிரட்டியதும் அமைச்சர். ஆனா.. நடவடிக்கை பாய்ந்திருப்பது, பொது இடத்தில் அமைச்சரால் மிரட்டப்பட்ட நேர்மையான அதிகாரி மீது. புகாரில் சொல்லப்பட்ட விஷயம் உண்மைதானா என்று முதலில் அமைச்சரை விசாரித்திருக்க வேண்டும். பறக்கும்படை குழுவினரையும் விசாரித்திருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யாமல், பறக்கும்படை குழுத்தலைவர் மீது டிரான்ஸ்பர் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்றால் என்ன சொல்வது?

 

ஆளும்கட்சியினரும், அமைச்சர்களும் தேர்தல் விதிமுறைகளை மீறினாலும் கண்டுகொள்ளக்கூடாது என்று சொல்லாமல் சொல்வது போன்று தேர்தல் ஆணையம் செயல்பட்டிருக்கிறது. கோவில்பட்டியில் அதிகாரி ஒருவர் மீது எடுத்திருக்கும் இந்த  நடவடிக்கை, தமிழகம் முழுவதும் இயங்கிவரும் பறக்கும்படையினருக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கை போல இருக்கிறது. சுதந்திரமாகச் செயல்பட விடாமல் எங்கள் கையைக் கட்டிப்போட்டு விட்டது தேர்தல் ஆணையம். இனி, எந்த மந்திரி காரில் போனாலும், ஆளும்கட்சி பிரமுகர்கள் கார்களில் போனாலும், சோதனையே போடாமல்  சல்யூட் அடித்து அனுப்பிவிடுவோம். வேறு வழியில்லை” என்றனர் குமுறலாக.

 

 Transfer to flying officer threatened by Minister Kadampur Raju! - Injustice committed by the Election Commission!

 

இடமாற்ற நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான செந்தில்ராஜை தொடர்புகொண்டோம்.

 

“டிரான்ஸ்பர் பண்ணலைங்க.  ஃப்ளையிங் ஸ்குவாட் ஆபீசர்ஸ அவங்க வேலை பார்க்கிற தொகுதில போடக்கூடாதுன்னு ரூல் இருக்கு. அதனால, சொந்தத் தொகுதில வேலை பார்க்கிற 17 பேரை பக்கத்து தொகுதிக்கு மாற்றியிருக்கிறோம். அவ்வளவுதானே தவிர, அந்த ஆபீஸர் அமைச்சர் மேல கொடுத்த  புகாரை உடனடியா எடுத்தாச்சு. நான் உடனே எஸ்.பி.கிட்ட சொன்னேன். சி.எஸ்.ஆர். போட்டதா எஸ்.பி. சொல்லிருக்காரு. நிச்சயமா நடவடிக்கை எடுப்போம். கோவில்பட்டியில் ஏ.இ.யா இருக்காரு மாரிமுத்து. மத்தபடி, இப்பவும் அவரு ஃப்ளையிங் ஸ்குவாட்லதான் இருக்காரு.” என்று விளக்கம் அளித்தவரிடம்,  ‘அமைச்சர் மீது புகார் கொடுத்த அன்றிரவே மாரிமுத்துவை பக்கத்து தொகுதிக்கு மாற்றியிருப்பது கடம்பூர் ராஜுவின் தலையீடு இருப்பதைத்தானே காட்டுகிறது?’ என்று இடைமறித்துக் கேட்டோம். அதற்கு ஆட்சியர் செந்தில்ராஜ் “அப்படி எதுவும் கிடையாது. ஃப்ளையிங் ஸ்குவாடோட டூட்டியே ஆர்கனைசிங் வெகிக்கிள்ஸ்தான். மாரிமுத்து அவரோட பணியைத்தான் செய்திருக்காரு. அவரோட புகாரை எடுக்கச்சொல்லி, அதற்கான நடவடிக்கை கண்டிப்பா எடுக்கப்படும். எலக்ஷன் கமிஷன் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ நாங்க ஃபாலோ பண்ணுறோம்.” என்று முடித்துக்கொண்டார்.

 

பறக்கும் படை தரப்பிலோ, “மாரிமுத்து இளநிலை பொறியாளராக வேலை பார்ப்பது,  தூத்துக்குடி கலெக்டர் ஆபீஸுக்கு பக்கத்திலுள்ள, தூத்துக்குடி நபார்டு மற்றும் கிராம சாலைகள் – தூத்துக்குடி பிரிவில்தான்.  அதனால்தான், அவர் வேலை பார்க்கும் தூத்துக்குடி தொகுதியில் போடாமல்,  கோவில்பட்டி தொகுதியில் போட்டிருக்கிறார்கள். கோவில்பட்டியில் எந்த அலுவலகத்திலும் மாரிமுத்து வேலை பார்க்கவில்லை. முதலில் ரூல்படி சரியாத்தான் போட்டிருந்தாங்க. அமைச்சர் மேல கம்ப்ளைன்ட் கொடுத்தவுடனே, அமைச்சரை திருப்திப்படுத்துவதற்காக, தேவையில்லாம அவரை விளாத்திகுளத்துக்கு தூக்கியடிச்சிருக்காங்க. அமைச்சரின் தலையீடு கலெக்டருக்கு தெரியவில்லையா? தெரிந்தேதான், மாரிமுத்து கோவில்பட்டியில் வேலை பார்க்கிறார் என்று பொய் சொல்கிறாரா?” என்று உண்மையைப் போட்டுடைத்தார்கள்.    

தமிழகத்தில் தேர்தலை நேர்மையாக நடத்துவார்களா என்று சந்தேகம் எழுவதற்கு இந்த ஒரு சம்பவமே போதும்!

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.