தமிழகத்தில் நேர்மறையான அரசியல் வர வேண்டும் இனி இங்கு எதிர்மறையான அரசியலுக்கு இடமில்லை என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ராமர், சிலையுடன் ஒரு ரதம் கடந்த பல நாட்களாக நாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு சென்று இன்று தமிழகத்துக்கு வருகிறது. இதில் எதிர்ப்பு தெரிவித்து கைதாகும் அளவுக்கு என்ன இருக்கிறது? நாடு முழுவதும் எந்த பிரச்சினையும் இல்லாமல் அமைதியாக நடந்து வருகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது? பிற மதத்துக்கு எதிரான கருத்துக்களையோ, ஒவ்வாத கருத்துக்களையோ தெரிவித்தால் எதிர்ப்பு தெரிவிக்கலாம்.
யாத்திரையை ராமர் மீது நம்பிக்கை வைத்து இருப்பவர்கள் வரவேற்கட்டும். வணங்கட்டும். உங்களுக்கு விருப்பமில்லையா முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விட வேண்டியது தானே? ரதத்தையே அனுமதிக்க மாட்டோம் என்று சொல்ல என்ன உரிமை இருக்கிறது? இவர்கள் சொல்வதை பார்த்தால் தமிழகத்தில் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களே இருக்க கூடாது. கடவுள் வழிபாட்டு செயல்களே நடைபெற கூடாது என்று திட்டமிட்டு செயல்படுவது போல் தெரிகிறது.
இந்து மதம் சார்ந்த எந்த நடவடிக்கையும் தமிழகத்தில் இருக்கக்கூடாது என்று கூறும் ஸ்டாலின் போன்றவர்களை இந்து மக்கள் அடையாளம் காண வேண்டும். உங்கள் நம்பிக்கையை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் எங்கள் நம்பிக்கையை நாங்கள் வைத்துக்கொள்கிறோம்.
மதம் சார்ந்த எந்த நடவடிக்கையும் இருக்கக் கூடாது என்று கூறுவது பெரும்பான்மையான மக்களின் மனதை புண்படுத்தும். இந்துக்கள் எப்போதும் அமைதியின் மீது நம்பிக்கை உள்ளவர்கள். ரத யாத்திரை அமைதியாக ராமேஸ்வரத்தில் நிறைவடைந்திருக்கும். தமிழகத்தில் நேர்மறையான அரசியல் வர வேண்டும் இனி இங்கு எதிர்மறையான அரசியலுக்கு இடமில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இனி எதிர்மறையான அரசியலுக்கு இடமில்லை: தமிழிசை
சார்ந்த செய்திகள்
Next Story
'ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்' - திமுக தலைவர் ஸ்டாலின்
நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்தநிலையில் 'ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்' என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், 'இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும் ‘இந்தியா’ கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்கிற ஒரே இலக்குடன் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து நிற்கும் தோழமைக் கட்சியினர் அனைவரையும் வரவேற்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகாலமாக இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத – மாநில உரிமைகளைப் பறித்த ஆட்சியை விரட்டிட, 2024 நாடாளுமன்றத் தேர்தல் களமே சரியான வாய்ப்பாகும் என்கிற உறுதியான நம்பிக்கையுடன் இந்தியா கூட்டணியில் - திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தோள் கொடுக்கும் தோழமைக் கட்சிகளுடன் களத்தைச் சந்திக்கிறோம்.
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தோழமைக் கட்சியினருடன் ஏற்பட்ட கொள்கை உறவு, தேர்தல் கூட்டணியாக இணைந்து 2019நாடாளுமன்றத் தேர்தல் களம், 2021 சட்டமன்றத் தேர்தல் களம், ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம், மாநகராட்சி - நகராட்சித் தேர்தல் களம் என அனைத்திலும் தொடர் வெற்றியைப் பெற்று வருகிறோம். ஐந்தாவது முறையாகத் தொடரும் இந்த கொள்கை அடிப்படையிலான வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ள தோழமைக் கட்சியினருக்கு உரிய வகையில் இடங்களை ஒதுக்கி, தொகுதிப் பங்கீடுகளைச் செய்யும் ஜனநாயகப்பூர்வமான நடைமுறையை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.
பாசிசத்தை வீழ்த்திட வேண்டும் என்கிற ஒற்றை இலக்குடனான இந்தப் பயணத்தில், ஒரு சில ஜனநாயக இயக்கங்களுக்குத் தொகுதி ஒதுக்க இயலாத சூழல் ஏற்பட்டிருப்பது உண்மையில் எனக்கும் வருத்தத்தைத் தருகிறது. தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையையும் கூட்டணியின் வலிமையையும் கருத்தில் கொண்டு, இதுகுறித்து அனைத்துத் தோழமை இயக்கங்களிடமும் என் சார்பிலும் கழகத்தின் சார்பிலும் விளக்கப்பட்டுள்ளது.
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் யாரை வீழ்த்த வேண்டும், அதற்கு எந்த வகையில் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதைத் தொகுதிப் பங்கீட்டில் வாய்ப்பு பெறாத தோழமைக் கட்சியினரும் உணர்ந்து, உளப்பூர்வமான ஆதரவை நல்கி, தேர்தல் பணியாற்ற முடிவெடுத்திருப்பது ஆக்கப்பூர்வமான ஜனநாயகப் பண்பை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மனிதநேய மக்கள் கட்சிக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இடம் ஒதுக்க இயலாமல் போன நிலையிலும், மதவெறி பாசிசத்தை வீழ்த்திடத் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்குப் பக்கபலமாக இருப்போம் என அக்கட்சிகளின் நிர்வாகிகள் முடிவெடுத்து ஆதரவைத் தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன். மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுபோலவே, இந்தியா கூட்டணி வெற்றி பெறக் களப்பணியாற்ற முன்வந்துள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களுக்கும், நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வரும் அமைப்பினருக்கும் நன்றியினை உரித்தாக்குவதோடு, 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில், “நாற்பதும் நமதே! நாடும் நமதே!” என்கிற வகையில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி அடைந்திடவும், இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிடவும் தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன். ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்!' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
'மோடி ஒவ்வொரு முறை வரும்போதும் அவரது தவறுகளே நினைவுக்கு வரும்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
தேர்தல் பத்திர ஊழல் பாஜகவின் முகமூடியை கிழித்துள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் பலரும் பாஜகவின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேர்தல் பத்திர ஊழல் பாஜகவின் முகமூடியை கிழித்துள்ளது. உண்மையான ஊழல் கட்சி பாஜக தான் என்பது தேர்தல் பத்திர ஊழல் மூலம் அம்பலமாகியுள்ளது. மற்ற கட்சிகளை ஊழல் கட்சி என்று விமர்சித்துள்ள பாஜக தான் உண்மையான ஊழல் கட்சி. அமலாக்கதுறையின் சோதனைகளுக்கு ஆளான சில நாட்களில் ஏராளமான நிறுவனங்கள் தாராளமாக பாஜகவுக்கு நிதி உதவி வழங்கியுள்ளன.
அமலாக்கத்துறை மூலம் மிரட்டி நிறுவனங்களிடமிருந்து பல கோடி பறித்துள்ளதால் பாஜக கட்சிதான் ஊழல் கட்சி என மக்கள் உணர்ந்துள்ளனர். இந்தி திணிப்பின் போது இரட்டை மொழிக் கொள்கையில் உறுதியாக இருந்தது போல் சி.ஏ.ஏ வை அமல்படுத்த மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். திமுக பற்றி பிரதமர் மோடி தவறான தகவல்களை பேசி வருகிறார். தமிழ்நாட்டுக்குச் செய்த திட்டங்கள் என்னென்ன என்று கேள்வி எழுப்பினால் பாஜகவினர் அதற்கு பதிலளிப்பதில்லை.
வதந்திகளை பரப்பி பாஜகவினர் கவனத்தை திசை திரும்புகின்றனர். ஒன்றிய அரசின் எந்த திட்டம் தமிழ்நாட்டில் முடக்கப்பட்டது என்று கேட்டால் பாஜகவினரிடம் பதில் இல்லை. பிரதமர் வீட்டு வசதி திட்டம், ஜல் ஜீவன் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவது பாஜகவினர் முதல் பிரதமர் வரை அனைவருக்கும் தெரியும். திமுகவில் வாரிசு அரசியல் என்று கூறி பிரச்சனைகளை பாஜகவினர் திசை திரும்புகின்றனர். பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் உள்ள வாரிசுகள் இடம் பெற்றுள்ளது பற்றி பிரதமர் பதில் கூறுவாரா? பாஜக ஆட்சியில் 7.5 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கை கொடுத்ததற்கு பிரதமரின் பதில் என்ன?
தேர்தல் பத்திரம் மூலம் ஊழலையே பாஜக சட்டபூர்வமாக செய்துள்ளது. தேர்தல் பத்திர தில்லுமுல்லுகள் அமலாக்கத்துறை செயல்பாட்டை அம்பலப்படுத்தி உள்ளது. தேர்தல் பத்திர ஊழல் பாஜகவின் முகமூடி கிழித்துள்ளது. அமலாக்கத்துறை செயல்பாட்டை அம்பலப்படுத்தி உள்ளதால் திமுக அமைச்சர்கள் மீது அரசியல் நோக்கோடு வழக்கு தொடரப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. களங்கம் கற்பிக்கும் முயற்சிகளை சட்டபூர்வமாக திமுக முறியடிக்கும்.
தமிழ்நாட்டுக்கு பாஜக செய்த சாதனைகள் எதுவும் கூற முடியாததால் எம்ஜிஆர், ஜெயலலிதாவை பிரதமர் புகழ்ந்துள்ளார். பாஜகவினர் போதை பொருள் பற்றி பேசும் நிலையில் குஜராத்தில் இருந்து தான் அதிக போதை பொருட்கள் வருகின்றன. மோடி ஆட்சியின் 10 ஆண்டு கால தோல்வியால் நாடு முழுவதும் மக்கள் விரக்தியில் உள்ளனர். தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் மக்களின் விரக்தி தேர்தலில் எதிரொலிக்கும். மோடி ஒவ்வொரு முறை தமிழ்நாட்டுக்கு வரும்போதும் அவரது தவறுகளே மக்கள் நினைவுக்கு வரும். போதை பொருட்களை தடுக்கக்கோரி பழனிசாமி நடத்திய போராட்டம் அரசியல் நாடகம். அதிமுக ஆட்சியில் டிஜிபி மீது குட்கா வழக்கு பதிவு செய்யப்பட்டது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.