Skip to main content

பா.ஜ.க. சொல்வதைத்தான் அ.தி.மு.க. கேட்கிறது: பா.ஜ.க.வை எதிர்த்து ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.ஸால் எதுவும் செய்ய முடியாது -தங்கதமிழ்ச்செல்வன்

Published on 17/03/2018 | Edited on 17/03/2018
thanga tamilselvan mla


பா.ஜ.க. என்ன சொல்கிறதோ அதைத்தான் அ.தி.மு.க. கேட்டு கொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது. கர்நாடகாவில் தேர்தல் முடியும் வரை அது சாத்தியமில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
 

‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்பது கட்சியல்ல. அது ஒரு தற்காலிக அமைப்புதான். எங்கள் நோக்கம் அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் கையில் எடுப்பதுதான். அதன்படி செயல்படுகிறோம். நாஞ்சில் சம்பத் விலகிய காரணம் தெரியவில்லை.
 

அம்மா இங்கு இருக்கும் போது, திராவிடமும், அண்ணாவும் இங்கே இருக்கிறது. தனி கட்சி ஆரம்பிக்கக்கூடாது என்று நான் சொன்னது உண்மைதான். இந்த அமைப்பு பதிவு செய்யப்படவில்லை.
 

கே.சி.பழனிசாமி, தமிழகம் நலன் கருதி ஒரு கருத்தை சொன்னார். அதற்காக அவரை கட்சியை விட்டு நீக்குவதா? என்னைப் பொறுத்தவரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது.
 

கர்நாடகாவில் தேர்தல் முடியும் வரை அது சாத்தியமல்ல. அ.தி.மு.க.வின் சட்டவிதிகளின் படி பொதுச் செயலாளர் தான். கட்சி நிர்வாகிகளை நியமிக்கவும் நீக்கவும் முடியும். ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் அதை செய்ய முடியாது. அவர்கள் செய்த நியமனமும் செல்லாது, நீக்கியதும் செல்லாது.


பா.ஜனதாவை நாங்கள் ஆதரிக்கவில்லை. அப்படி இருந்து இருந்தால் எங்கள் மீது ஏன் இரட்டை இலை வழக்கு, வருமானவரி சோதனை நடத்தப்பட்டது.
 

18 எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கில் தீர்ப்பு சாதகமாக வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை சசிகலா, தினகரன் முடிவு செய்வார்கள். பா.ஜ.க.வை எதிர்த்து இவர்களால் எதுவும் செய்ய முடியாது. எந்த திட்டங்களையும் கொண்டு வர முடியாது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இவர்களால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியவில்லை.
 

பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை பா.ஜனதா கூட்டணியில் இருந்த தெலுங்கு தேச கட்சி கொண்டு வந்தது. அதற்கு அ.தி.மு.க. 37 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தாலே போதும். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்துவிடும். பா.ஜனதா கட்சி கவிழ்ந்து விடும். அடுத்ததாக வருகின்ற அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை கண்டிப்பாக அமைத்துதான் ஆக வேண்டிய நிலை ஏற்படும். பா.ஜ.க. என்ன சொல்கிறதோ அதைத்தான் அ.தி.மு.க. கேட்டு கொண்டிருக்கிறது.
 

இவர்கள் கட்சி கொடி, சின்னம் குறித்து வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். இவர்கள் எதற்குதான் வழக்கு தொடரவில்லை. நாங்கள் கேட்கும் சின்னத்திற்கு வழக்கு தொடர்ந்தனர். நானும் வெற்றிவேலும் ஊழலை வெளிப்படுத்தினோம். அதற்கு எங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு கூறினார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

எழுதிக் கொடுத்துவிட்டு இணைந்த தங்க தமிழ்ச்செல்வன்...(படங்கள்)

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், முறைப்படி திமுகவின் உறுப்பினர் படிவத்தை பூர்த்திச்செய்து, தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். 

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்க.தமிழ்ச்செல்வன்,  ‘’தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே.   அதிமுகவை பிஜேபி இயக்கி வருவதால் தன்மானம் உள்ள என்னால் தன்மானத்தை இழந்து அதிமுகவில் இணைய விருப்பமில்லை’’என்று தெரிவித்தார்.   

Next Story

''நான் திமுகவுக்கு போவதாக சொல்வது வதந்தி'' – மறுக்கிறார் தங்க.தமிழ்ச்செல்வன்

Published on 30/01/2019 | Edited on 30/01/2019

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று ஜனவரி 30ந்தேதி அமமுக நிர்வாகிகளிடன் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு அவர் தங்கியுள்ள தனியார் ஹோட்டலுக்கு வருகை தந்த அமமுக கட்சியின் முக்கிய நிர்வாகியான தங்க.தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

thangatamilselvan interview

 

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தவர், நான் திமுகவுக்கு போவதாக வரும் தகவல் பொய்யானவை. என் தந்தை திமுகவில் இருந்தார். கலைஞர் – எம்.ஜி.ஆர் மோதல் வந்தபோது, ஒரு நடிகரின் பின்னால் போகக்கூடாது என பேசியபோது, என் தந்தை எம்.ஜி.ஆர் பின்னால் நின்றார். 4 முறை ஒன்றிய செயலாளராக இருந்தவர். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் அதிமுக உடைந்தபோது, ஜெயலலிதா பின்னால் செல்லவில்லை. அப்படிப்பட்ட நான் இப்போது காலத்தின் கோலத்தால் சின்னம்மா பின்னால் நிற்கிறேன், இரட்டை இலைக்காக வழக்கு தொடுத்துள்ளார் எங்கள் துணை பொதுச்செயலாளர், அதில் வெற்றி பெற்று இரட்டை இலையை பெறுவோம், என் சின்னம் என்றும் இரட்டை இலை தான் என்றார்.

 

 

தேர்தல் வந்தால் எல்லா கட்சியும் பிற கட்சியோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும், கூட்டணி அமைப்பதற்கான இறுதி நாளான்னு வரை கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும். அதனால் இப்போது யார், எந்த கூட்டணி என்று சொல்ல முடியாது.

 

 

திமுக தலைவர் நடத்தும் கிராமசபா கூட்டம் என்பது, அவர் கட்சியின் சார்பில் நடத்துகிறார், அது அவர்கள் பிரச்சனை. நான் டிவியில் பார்த்தவரை அந்த கூட்டம் இயல்பாக நடக்காமல் செயற்கை தனமாக உள்ளது.

 

 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜேக்டோ – ஜியோ அமைப்பினரை அழைத்து பேசி 9 கோரிக்கைகள் வைக்கிறார்களா 2வது நிறைவேற்ற வேண்டும், ஆசிரியர்கள், அதிகாரிகள் நினைத்தால் எதையும் சாதிப்பார்கள், அவர்கள் தான் வெற்றியை தீர்மானிப்பவர்கள். திமுக, கம்யூனிஸ்ட், அமமுக தான் போராட்டத்தை தூண்டிவிடுகிறார்கள் எனச்சொல்வது சரியல்ல. போராட்டத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவருக்கும் சுயஅறிவு உள்ளது, அவர்கள் தங்கள் உரிமைக்காக போராடுகிறார்கள்.

 

 

அமைச்சரவையில் ஊழல் நடக்கிறது என ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார் எனக்கேட்கிறிர்கள், உள்ளாட்சி துறை அமைச்சர் குடும்பம் தான் உள்ளாட்சிகளுக்கு அனுப்பப்படும் பிளீச்சிங் பவுடர் வாங்கி தருகிறது. அதில் பெரியளவில் ஊழல் நடந்து ள்ளது என்றார்.

 

 

தங்க தமிழ்ச்செல்வனின் பதில்கள் மாநிலத்தை ஆளும் அதிமுக அரசைக்கூட குத்துகிறது. ஆனால் திமுக தலைவர் பற்றிய கேள்விக்குயெல்லாம் சாப்டாகவே நழுவும் மீனாகவே பதில் தந்தார். இது அங்குயிருந்த அமமுகவினரையே குழப்பத்தில் ஆழ்த்தியது.