Skip to main content

நிதி இருந்தும் கஜா புயலுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை... -தமிழக அரசு

Published on 19/12/2018 | Edited on 19/12/2018

 

கஜா புயல் நிவாரணம் குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று நடந்த வழக்கு விசாரணையில், நிதியிருந்தும் கஜா புயலுக்கான நிவாரணத்தொகையை மத்திய அரசு வழங்கவில்லை, மாநில பேரிடர் நிவாரண நிதியில் போதுமான அளவு தொகை இருந்தும் மத்திய அரசு கொடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளது தமிழக அரசு. 

 

இதற்கு பதிலளித்த மத்திய அரசு, சேதங்கள் குறித்த இறுதி அறிக்கை அடிப்படையிலேயே தமிழகத்திற்கு கஜா புயல் நிவாரண நிதி அளிக்க முடியும். இறுதி அறிக்கை தயாரிக்கவே மத்திய அரசிடம் சந்தேகங்கள் கேட்கப்பட்டது எனவும் கூறியுள்ளது.


இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் எப்போது இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு பதிலளிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்