Skip to main content

சசிகலாவுக்கு மீண்டும் சிக்கல்; உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

Published on 29/08/2023 | Edited on 29/08/2023

 

 special court order to submit details of money in Sasikala's bank account

 

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான எம்ஜிஆர் மூலம் அவர் உருவாக்கிய அதிமுக கட்சிக்குள் அழைத்து வரப்பட்ட ஜெயலலிதா, எம்ஜிஆரின் இறப்பிற்கு பிறகு கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் முதல்வராக முதல் முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்படி அவர் முதல்வராக இருந்த 1991 முதல் 96 வரையிலான ஐந்தாண்டு கால ஆட்சி காலத்தில் ஜெயலலிதா தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து விட்டதாக தமிழ்நாட்டின் ஜனதா கட்சியை சேர்ந்த சுப்பிரமணிய சாமி அப்போது கவர்னராக இருந்த சென்னா ரெட்டியிடம் அனுமதி பெற்று 1996 ஆம் ஆண்டு சென்னை அமர்வு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

அந்த மனுவை விசாரித்த அன்றைய சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி ராமமூர்த்தி, தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இதனை புலனாய்வு செய்ய ஆணையிட்டார். இச்சொத்துக்களின் அன்றைய மதிப்பு ரூபாய் 66.65 கோடியாகும். 1996 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்ட பேரவை தேர்தலில் ஜெயலலிதா ஆட்சி முடிவுக்கு வந்ததால், அதற்கு பிறகு வந்த திமுக அரசு இந்த வழக்கை அரசு தரப்பு வழக்காக மாற்றிக்கொண்டது. திமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதாவின் சென்னை போயஸ் கார்டன் வீடு தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்பு துறையால் சோதனை செய்யப்பட்டது. அப்படி சோதனையிட்டதில் 800 கிலோ வெள்ளி பொருட்கள், 28 கிலோ தங்க ஆபரணங்கள், விதவிதமான வைர நகைகள், 750 ஜோடி காலணிகள், 10500 புடவைகள், 91 கை கடிகாரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

 

தனி ஒருவரின் பயன்பாட்டுக்கு இவ்வளவு பொருட்களா என்று அப்போது அந்த பொருட்கள் பற்றிய செய்திகள் எல்லா முன்னணி செய்தி தாள்களிலும் தலைப்பு செய்தியாக வெளிவந்திருந்தது. அதற்கு பிறகு 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆனதால் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கின்  விசாரணை சரியாக நடைபெறாத நிலை ஏற்பட்டது. இதனால் இவ்வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றும்படி அப்போதைய தி.மு.க. பொதுச் செயலாளர்  அன்பழகன், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இவ்வழக்கில் சுப்ரமணியன் சாமியும் தன்னை இணைத்துக் கொண்டார். அதன்படி 2003 ஆம் ஆண்டு  நவம்பர் 18ம் தேதி இந்த வழக்கு கர்நாடகா நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டது. கர்நாடக அரசு சார்பில் புதிய நீதிபதி மற்றும் அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டு இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா, வழக்கு விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு தராததால், ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கானது கர்நாடக நீதி மன்றத்தில் நீண்ட காலம் நடந்து வந்தது. அப்படி வழக்கு நடந்த காலங்களில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவை கர்நாடக நீதி மன்றம் பலமுறை கடுமையாக கண்டித்து வந்தது.

 

இப்படி பல ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக நீதி மன்றம் தீர்ப்பளித்தது. நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, ஜெயலலிதா சசிகலா இளவரசி சுதாகரன் ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் என்றும், முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் நூறு கோடி அபராதம், மற்ற மூவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் 10 கோடி ரூபாய் அபராதம் என தீர்ப்பளித்தார். சொத்து குவிப்பு வழக்கிற்கு தீர்ப்பு அளிக்கப் பட்டபோது ஜெயலலிதா முதல்வராக இருந்ததால் அவருக்கு கிடைத்த நான்காண்டு கால சிறைத்தண்டனையின் காரணமாக அவர் முதல்வர் பதவியை இழக்க நேரிட்டது. கர்நாடக சிறப்பு நீதி மன்றம் தனக்கு வழங்கிய தண்டனையை எதிர்த்து 2015 ஆம் ஆண்டு கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஜெயலலிதா.

 

ஜெயலலிதாவின் அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி என்பவர் அரசு வழக்கறிஞர் ஜெயலலிதா மீதான குற்றங்களுக்கு  சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று கூறி ஜெயலலிதாவை விடுதலை செய்தார். விடுதலை அளிக்கப்பட்ட அந்த தீர்ப்பில் குமாரசாமி கொடுத்த கணக்கு ஒன்று அப்போது குமாரசாமி கணக்கு என்று பலராலும் நகைச்சுவையாக பேசப்பட்டது. மேலும் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது செல்லாது என்று கர்நாடக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனு விசாரணையில் இருக்கும்போதே கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா இறந்து விட அதற்குப் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட வழக்கு தொடர்பான அனைவரும் குற்றவாளிகள் தான் என்றும் கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

 

இந்தநிலையில் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்டப் பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். மேலும் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பொருட்களை ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு ஆன செலவுக்கு ஈடாக கர்நாடக அரசு அந்த பணத்தை எடுத்து கொள்ளலாம் என்றும் நரசிம்ம மூர்த்தி தனது மனுவில் கருத்து தெரிவித்து இருந்தார். எனவே இவ்வழக்கில் இணைக்கப்பட்ட சொத்துகளின் விவரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

 

இதையடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் பட்டியல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஏலம் விட வேண்டிய பொருட்களின் பட்டியலை அளிக்குமாறு கர்நாடக அரசின் வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவை தொடர்ந்து ஜெயலலிதாவின் தங்கம், வைரம், வெள்ளி, நவரத்தின கற்கள், முத்து, பவளம், புடவை, தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பட்டியலை அரசு வழக்கறிஞர் ஜாவலி என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 

 

ஆனால் புடவைகள் காலணிகள் கைக்கடிகாரங்கள் ஆகியவை ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் இணைக்கப்படாததால் அந்த மாதிரியான பொருட்களை ஏலம் விட அனுமதிக்க முடியாது என்றும், சசிகலா இளவரசி சுதாகரன் ஆகியோரின் தற்போதைய வங்கிக்கணக்கில் உள்ள பண விபரங்களை வரும் 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கர்நாடகா சிறப்பு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2000-க்கும் மேல் ஆபாச வீடியோக்கள்? பென் டிரைவ் முழுவதும் பெண்கள்; சிக்கிய பாஜக கூட்டணி வேட்பாளர்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Controversial BJP alliance candidate and devegowda grandson for Over 2000 videos?

கர்நாடகா மாநிலத்தில், நடைபெறும் மக்களவைத் தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி, பா.ஜ.கவுடன் கூட்டணியில் இருக்கிறது. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில், பாஜக 25 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா அவரது மகன்கள் ரேவண்ணா, குமாரசாமி ஆகியோரைத் தொடர்ந்து தேவகவுடா பேரன்கள் நிகில் குமாரசாமி, பிரஜ்வால் ரேவண்ணா ஆகியோரும் தீவிர அரசியலில் உள்ளனர். இவர்களில், ஹாசன் தொகுதியில் எம்.பியாக உள்ள பிரஜ்வால் ரேவண்ணா, இந்த முறை பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்டார். இவர், தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் ஹெச்.டி.ரேவண்ணாவின் மூத்த மகனும் ஆவார். 

இதனால், இவர் போட்டியிடும் தொகுதியில் பா.ஜ.க கூட்டணி சார்பில் தீவிர பரப்புரை நடைபெற்று முதற்கட்டமாக 14 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. ஆனால், தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு, பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 300-க்கும் அதிகமான பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் ஹாசன் தொகுதி முழுவதும் காட்டுத் தீயாக பரவியது. அதுவும், ஹாசன் தொகுதி வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு முதல் நாளில் இருந்தே இந்த வீடியோக்கள் அத்தொகுதி முழுவதும் வாட்ஸ் அப்களில் வலம் வந்தன. இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதில், அரசுத் துறையைச் சேர்ந்த சில பெண் அதிகாரிகளும் ஆபாச வீடியோவில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இது, கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து, சமூக ஊடகங்களிலும் பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோ பரவ இந்தியா முழுவதும் இந்த சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனிடையே, அம்மாநில மகளிர் குழுவின் தலைவி நாகலட்சுமி சவுத்ரி, அந்த வீடியோ தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா தன் எக்ஸ் பக்கத்தில், ‘பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க அரசு முடிவு செய்திருக்கிறது. அந்த வீடியோ கிளிப்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. கர்நாடக மாநில மகளிர் ஆணையம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டது. அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, கர்நாடகவின் ஹோலநரசிப்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவின் கீழ் பிரஜ்வல் ரேவண்ணாவின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஜே.டி.எஸ் கட்சியின் ஹாசன் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது என கர்நாடக முதல்வர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. ஆபாச வீடியோ விவகாரம் மாநிலம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பெங்களூரில் இருந்து ஜெர்மனுக்கு தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த கையோடு பிரஜ்வல் ரேவண்ணா புறப்பட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆதரவாளர்கள் அந்த ஆபாச வீடியோக்கள் சித்தரிக்கப்பட்டது என கூறி வருகின்றனர். பதிலுக்கு, பிரஜ்வல் ரேவண்ணாவும் தனது புகழைக் கெடுக்கும் நோக்கில் ஆபாச வீடியோக்கள் பரப்பப்படுவதாக புகார் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Controversial BJP alliance candidate and devegowda grandson for Over 2000 videos?

ஆனால், பாஜக தரப்பு பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை என கூறிவருவது சந்தேகத்தை கிளப்புவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் சார்பில் ஆபாச வீடியோ விவகாரத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய வேண்டும் என போராட்டமும் நடைபெற்று வருகிறது. முன்னதாக பென் டிரைவ் மூலமே பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச படம் பரப்பப் பட்டதாக தகவல் சொல்லப்படுகிறது. ஆனால், விரிவான விசாரணைக்கு பிறகே முழுப் பின்னணி தெரிய வரும். அந்த பென் டிரைவில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. இன்னும் வட கர்நாடகாவில் மக்களவைத் தேர்தல் முடியாத சூழலில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களும், கூட்டணியில் உள்ளவர்களும் ஆபாச வீடியோக்களில் சிக்குவது குறிப்பிடத்தக்கது.

Next Story

தேவகவுடா மகன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Deve Gowda's son issue in karnataka 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இத்தகைய சூழலில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

Deve Gowda's son issue in karnataka 

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் அவரைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Deve Gowda's son issue in karnataka 

இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எச்.டி.ரேவண்ணா வீட்டில் பணியாற்றும் சமையலர் அளித்த புகாரின் பேரில் ரேவண்ணா மீது பாலியல் சீண்டல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹோலேநர்சிபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் மீது ஏற்கெனவே பாலியல் புகார் உள்ள நிலையில் தற்போது தந்தை மீதும் பாலியல் புகார் எழுந்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.