புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான எம்.நடராஜன் நள்ளிரவில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட எம்.நடராஜன், கடந்த 16-ம் தேதி, சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் பல்வேறு உறுப்புகள் செயல் இழந்து நள்ளிரவு 1 மணி 35 நிமிடத்தில் உயிரிழந்தார்.
அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்பட உள்ளது.
இதற்கிடையே நடராஜன் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. சிறை நடைமுறைகள் முடிந்த நிலையில் இன்று பிற்பகல் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, அங்கிருந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர் புறப்பட்டார்.
சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்டுள்ள சசிகலா தஞ்சாவூரில் மட்டுமே தங்கியிருக்க வேண்டும், சென்னைக்கு செல்லக்கூடாது என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 3ம் தேதி வரை சசிகலாவுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.
சிறையிலிருந்து வெளியே வந்தார் சசிகலா!
சார்ந்த செய்திகள்
Next Story
சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!
சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.
Next Story
'அதில் நாங்கள் தலையிட முடியாது'- ஜெ.தீபா பேட்டி
ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் அதிமுக தொண்டர்களாலும், அதிமுக நிர்வாகிகளாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேநாளில் சசிகலா 'ஜெயலலிதா இல்லம்' என்ற பெயரில் போயஸ் கார்டனில் புதிய வீடு ஒன்றை கட்டி இன்று குடியேறி உள்ளார். இந்நிலையில் சென்னையில் போயஸ் கார்டெனில் உள்ள வேதா இல்லத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அவர் பேசுகையில், ''ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் இன்று. அவர் எனது அத்தை. அவர் குடும்ப வழி உறவு என்பதால் பிறந்தநாள் விழாவிற்காக எங்களால் முடிந்த அளவிற்கு எளிமையான பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். எங்கள் முறைப்படி செய்து கொண்டிருக்கிறோம். ஒரு பிறந்தநாள் கூட அவருக்கு நாங்கள் வாழ்த்து சொல்லாமல் இருந்ததே இல்லை. எல்லா பிறந்தநாளுக்கும் அத்தைக்கு நான் வாழ்த்து சொல்வேன். வேதா இல்லத்திற்கு எதிரே 'ஜெயலலிதா இல்லம்' என சசிகலா வீடு கட்டியுள்ளது அவருடைய தனிப்பட்ட விஷயம். அதில் நாங்கள் தலையிட முடியாது.
இந்த ரோட்டில் நாங்கள் தான் இருப்போம் வேறு யாரும் இருக்கக்கூடாது என்று சொல்ல முடியாது. அது அவர்களுடைய இல்லம். அங்கு அவர்கள் வீடு கட்டியுள்ளார்கள். அதில் குடியேறி உள்ளார்கள். என்னுடைய பர்சனலாக என்னுடைய நினைவெல்லாம் இங்கேதான். இந்த இடத்தில் தான் அவருக்கு நான் வாழ்த்து சொல்வேன்'' என்றார்.