Skip to main content

அரசு மருத்துவமனையில் சசிகலாவிற்கு சிகிச்சை... கரோனா முடிவுக்காக காத்திருக்கும் சிறை நிர்வாகம்!

Published on 20/01/2021 | Edited on 20/01/2021
Sasikala admitted in govt hospital

 

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா வரும் ஜனவரி 27ஆம் தேதி பெங்களூர் சிறையிலிருந்து விடுதலை ஆவார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு அதன் காரணமாக பெங்களூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

தினசரி செய்யப்படும் உடல் பரிசோதனைபோல் இன்று பரிசோதனை செய்யப்பட்டபோது அவரது உடல் வெப்பநிலை சற்று அதிகமாகவும், காய்ச்சல் மற்றும் சிறிய அளவிலான மூச்சுத்திணறல் இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் வெளியானது. பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிற்பகல் 2 மணிக்கு சிறையில் இருந்து சசிகலாவிற்கு உடல்நிலை சரியில்லை என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில், மருத்துவர்கள் சிறைக்கு வந்து சசிகலாவிற்கு முதற்கட்ட சிகிச்சைகள் அளித்தனர். அதன் பிறகு நேரடியாக அதிகபட்ச சிகிச்சை தேவை என்பதால் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இதனால் அந்த பகுதியில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. சிவாஜி நகர், பைரிங் ஹாஸ்பிடல் என்று சொல்லப்படுகிற அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவது தொடர்பான வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது. அதேபோல் உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் சசிகலாவிற்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான முடிவு காத்திருக்கின்றனர் சிறைத்துறையினர்.

 

இந்நிலையில் ''சசிகலாவுக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்ததாக சிறை நிர்வாகம் தரப்பில் கூறினார்கள். சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக பெங்களூரு சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது'' என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்