Skip to main content

திண்டுக்கல் மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் கூண்டோடு கலைப்பு!  - முழு விபரம்

Published on 23/03/2018 | Edited on 23/03/2018
dindugal rajini

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரஜினி மக்கள் மன்றத்தில் மாவட்ட செயலாளராக இருந்து வந்த தம்புராஜை  மாநில தலைமை நிர்வாகியான சுதாகர் அதிரடியாக தற்காலிக பணி நீக்கம் செய்தார்.  அதைக்கண்டு  மாவட்டத்தில் உள்ள ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள தம்புராஜ் ஆதரவாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மாவட்ட நிர்வாகிகள் சிலருடன் திண்டுக்கல் மாநகர செயலாளர் ஜோசப் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும் போது,  ‘’அண்ணன் தம்புராஜ் 35 ஆண்டுகளாக  ரஜினி ரசிகராக  இருந்து கொண்டு நகரம் முதல் பட்டி தொட்டிகள் வரை கிளைகளை உருவாக்கி மன்றத்தை வளர்த்து வந்தார். அதனாலயே தலைமையும் அண்ணன் தம்புராஜ் செயல்பாடுகளை பாராட்டி மாவட்ட செயலாளர் பதவியை கொடுத்தது. அதன் பின் தலைவர் அரசியலில் குதித்தவுடனே  தலைவரின் மக்கள் மன்றத்திற்கு ஆயிரக்கணக்கான  உறுப்பினர்களை சேர்த்து மக்கள் மன்றத்தை பலப்படுத்தி  வந்தார்.


  

  இந்த நிலையில் தான் கடந்த மாதம் 27ம்தேதி மாவட்ட நிர்வாகிகள் நியமனத்திற்காக 250 பேரை தலைமைக்கு அழைத்து சென்று நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வைத்தார். அதன் அடிப்படையில் தலைமையும் கடந்த 15ம் தேதி நகரம், ஒன்றியம், பேரூராட்சி என மாவட்ட  பொறுப்பாளர்கள் 178 பேரை நியமனம் செய்தது. இதில் மாவட்ட  பொறுப்பாளர்களான குணசேகரன், தண்டபானி, வெங்கடேசன், ரஜினிசரவணன், சரவணன், கதிரேசன், சிக்கேந்தர், மாரியம்மாள் ஆகிய  8 பேருடன் ஒன்றிய பொறுப்பாளர்கள்109 பேர் மாநகர பகுதி செயலாளர்கள்  22பேர் மகளிர் அணி பொறுப்பாளர்கள் 7பேர் என 146பேர் அண்ணன்தம்புராஜ்சை மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து தலைமை எடுத்தற்காக தங்கள் பதவிகளையும்  கூண்டோடு ராஜினமா செய்து விட்டனர். அதனுடைய  ராஜினமா கடிதத்தை தலைவரிடம் நேரில் கொடுக்க இருக்கிறோம். அதற்கான அனுமதியை தலைமையிடம் கேட்டு வருகிறோம். இப்படி செயல்பட கூடிய ஒரு மாவட்ட செயலாளரை தலைமையில் உள்ள  சிலர் தவறான  தகவல்களை தலைவர் வரைக்கும் கொண்டு போய் அண்ணன் தம்புராஜ் பதவியை பறிக்க  வழி செய்து  இருக்கிறார்கள்  என்பது  தான் உண்மை.  அதனால மீண்டும் அண்ணன் தம்புராஜ்க்கு தலைவர், மாவட்ட செயலாளர்  பதவியை  கொடுக்க வேண்டும்.  தவறினால்  நாங்கள்  தலைவரின் ரசிகர்களாக இருப்பமே தவிர, தலைவரின் மக்கள் மன்றத்தில் செயல் பட மாட்டோம் .  ஆகவே தலைவர்  ஒரு நல்ல முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்’’  என்று கூறினார். 

 

திண்டுக்கல்  மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் திடீரென  கூண்டோடு  கலைக்கப்பட போகிற விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.