Skip to main content

தாய்,தந்தை தற்கொலை -  தவிக்கும் 8 மாத குழந்தை!

Published on 26/07/2019 | Edited on 26/07/2019

 

 
புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 33). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் சிலிண்டர் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் டி.பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி (24) என்பவருக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம்  நடைபெற்றது. இவர்களுக்கு திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

 

s


இந்நிலையில் சரவணன் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவும் சரவணன் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வரவே  மனைவி ராஜாமணி கண்டித்ததால் இருவருக்கும் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதையடுத்து சரவணன் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார்.

 

பின்னர் சிறிதுநேரம் கழித்து வீட்டுக்கு திரும்பி வந்தபோது ராஜாமணி வீட்டில் இருந்த நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவது கண்ட சரவணன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சரவணன் தனது மைத்துனர் வீரமணியை போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். மேலும் ‘இனிமேல் நானும் வாழ விரும்பவில்லை. எனவே நானும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்’ கூறிவிட்டு தனது மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

 

அத்துடன் நள்ளிரவில் சரவணனின் 8 மாத குழந்தை அபினேஷ்வரின் அழுகை சத்தம் கேட்டு அவருடைய வீட்டின் அக்கம் பக்கத்து வீட்டார் வந்து கதவை திறந்து பார்த்தனர். அப்போது சரவணனும், அவருடைய மனைவியும் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


அதேசமயம் சரவணனின் மைத்துனர் வீரமணி மற்றும் உறவினர்களும் நெட்டப்பாக்கத்துக்கு விரைந்து வந்து கணவன், மனைவி இருவரது உடல்களையும் பார்த்து கதறி அழுதனர்.

 

இந்த சம்பவம் குறித்து தெரியவந்ததும் நெட்டப்பாக்கம்  போலீசார் அங்கு வந்து கணவன்-மனைவி இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்  குடி கெடுத்த குடியால் ஒரே நேரத்தில் தாய், தந்தையை இழந்து 8 மாத கைக்குழந்தை தவித்தது அனைவருக்கும் அனுதாபத்தை ஏற்படுத்தியது.

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி பிறந்தநாள் வேலையின்மை தினம்” - புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ்  

Published on 17/09/2023 | Edited on 17/09/2023

 

“Prime Minister Modi Birthday Unemployment Day” - Puducherry Youth Congress

 

பிரதமர் மோடி பிறந்தநாளை வேலையின்மை தினமாக கடைப்பிடித்து புதுச்சேரி இளைஞர் காங்கிரஸார் நூதன கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

 

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் இன்று (செப்.17ம் தேதி) பாஜகவினரால் கொண்டாடப்பட்டது. இவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் தங்களது வாழ்த்தை தெரிவித்தனர். 

 

இந்நிலையில், புதுச்சேரி இந்திரா காந்தி சிலை முன்பு திரண்ட புதுச்சேரி இளைஞர் காங்கிரஸார், கோஷங்களை எழுப்பினர். மேலும், டீ, பக்கோடா, சமோசா ஆகியவற்றை விற்று தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். 

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “பா.ஜ.க. அரசு ஜி20 மாநாட்டுக்கு ரூ. 4000 கோடி, புதிய நாடாளுமன்ற கட்ட ரூ. 20,000 கோடி என செலவு செய்துவிட்டு, நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்காமல்; தனது நண்பர் அதானிக்கு சலுகை வழங்குகிறது” என்று பேசினார். 

 

 

Next Story

73 பவுன் நகையை திருடி மோசடி செய்த கூட்டுறவுச் சங்க பொறுப்பாளர்

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

Cooperative society manager who stole 73 pounds of jewelry and cheated

 

புதுச்சேரி கொம்பாக்கத்தில் உள்ளது தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம். இந்தச் சங்கத்தில் கொம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பலர் தங்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். 

 

இதனிடையே கூட்டுறவு கடன் சங்கத்தில் வருடாந்திர தணிக்கை முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனவும், முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து சங்க தலைவர் எம்பெருமாள் கடந்த 16ஆம் தேதி தணிக்கையாளர் இந்திரமோகனுடன் சங்க நிர்வாக பொறுப்பாளரும், முதுநிலை எழுத்தருமான பாப்பான்சாவடியை சேர்ந்த கதிரவன்(48) என்பவரிடம் சங்க கணக்கு வழக்குகளை தணிக்கை செய்யக் கூறினர்.

 

இதற்கு கதிரவன் சரியான பதில் அளிக்காததுடன் மறுநாள் 17ஆம் தேதி பணிக்கு வராமல் விடுப்பு எடுத்துக் கொண்டார். இதனால் சந்தேகமடைந்த எம்பெருமாள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரை சந்தித்து சங்க கணக்குகளை ஆய்வு செய்ய வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து துணைப் பதிவாளர் தலைமையில் தணிக்கையாளர்கள் இந்திராமோகன், குப்புராமன், சிவசங்கர், திருநாவுக்கரசு, சந்தோஷ் குமார் அடங்கிய குழுவினர் சங்க பொறுப்பாளர் கதிரவனை சந்தித்து ஆய்வுக்கு அழைத்தனர். ஆனால் கதிரவன் ஆய்வுக்கு வர மறுத்து, நகை பாதுகாப்பு பெட்டகத்தின் சாவியை மட்டும் கொடுத்து அனுப்பினார்.

 

துணைப் பதிவாளர் முன்னிலையில் நகை பெட்டகம் திறந்து தணிக்கை செய்யப்பட்டது. அப்போது நகை கடன் கணக்குகளில் 198 கணக்குகள் மட்டுமே இருந்தன. அதிலும் 18 நகை கணக்கில் நகைகள் இல்லாமல் வெறும் பைகள் மட்டுமே இருந்தன. அவற்றில் இருந்த ரூபாய் 33 லட்சம் மதிப்புள்ள 588.50 கிராம் தங்க நகைகள் மாயமாகி இருந்தன. இதுகுறித்து சங்க நிர்வாக பொறுப்பாளர் கதிரவன் மீது சங்க தலைவர் எம்பெருமாள் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

போலீசார் மோசடி பிரிவில் வழக்கு பதிவு செய்து கதிரவனிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் கதிரவன் கடந்த பல ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். கொரோனா காலக்கட்டத்தில் ஏலச்சீட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் கூட்டுறவு சங்கத்தில் வைக்கப்பட்ட நகையை எடுத்து வேறு இடங்களில் அடமானம் வைத்து செலவு செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து கதிரவனை கைது செய்த போலீசார் நகைகளை அடமானம் வைக்க கதிரவனுக்கு உதவியவர்களை தேடி வருகின்றனர்.