Skip to main content

கடற்கரையில் கிடந்த இரண்டு சாமி சிலைகளை மீட்ட காவல்துறை! 

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

Police recover two Sami idols lying on the beach!

 

கடற்கரையில் கிடந்த இரண்டு சாமி சிலைகளைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

சென்னை பட்டினம்பாக்கம், சீனிவாசபுரம் கடற்கரையில் இரண்டு சாமி சிலைகள் கிடந்ததைக் கண்ட, அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சிலைகளை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்ற காவல்துறையினர். அவை கடத்தப்பட்ட சிலைகளா? சிக்கிவிடுவோம் என அஞ்சி யாராவது வீசி சென்றார்களா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

கடற்கரையில் கிடந்த இரண்டு சிலைகளில் ஒன்று அனுமன் சிலை ஆகும். மற்றொரு சிலை முருகன் சிலையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 

 

இதற்கிடையில், சிலைகளுக்கு காவல் நிலையத்தில் பூஜை செய்யப்பட்டு வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

 

சார்ந்த செய்திகள்