Skip to main content

அமெரிக்காவில் படிச்சிட்டு மீனம்பாக்கம் ஏர்போட்டில் இருந்து நேராக கட்சிக்கு வரவில்லை... ஓபிஎஸ் மகன் பேட்டி!

Published on 11/03/2019 | Edited on 11/03/2019
ops son P Raveendranath Kumar interview

 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்றும், நாளையும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் பெற்றது. கூட்டணிக்கு கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்று அறிவிக்கப்படாத நிலையில் இன்றைய தினம் 20 தொகுதிகளுக்கும், நாளைய தினம் 19 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெற்றது. 
 

இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, வளர்மதி ஆகியோர் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினர்.

 

ops son

 

தேனி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் நேர்காணலில் கலந்து கொண்டார்.

 

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்,

 

 

குடும்ப அரசியலுக்கு எதிராக இருக்கிறார் ஓபிஎஸ், ஆனால் ஓபிஎஸ் மகனான நீங்கள் போட்டியிட இருப்பது குடும்ப அரசியலுக்கு வித்திடாதா? என்ற கேள்விக்கு,

 

ஓபிஎஸ்சின் மகன் என்பதால் வாரிசு அரசியல் முத்திரை வந்துவிடுமா. நான் அமெரிக்காவில் படிச்சுட்டு நேராக மீனம்பாக்கம் ஏர்போர்ட் வந்து கழகத்திற்கு வந்து சேர்ந்து இங்கே எனது அப்பா பதவியில் இருக்கிறார் எனக்கு சீட் கொடுங்கள் என கேட்கவில்லை. நான் 18 வயதிலிருந்து கட்சி பணிகளில் இறங்கியுள்ளேன். இப்போது எனக்கு 39 வயது. 21 வருடமாக ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரங்களுக்கு சென்று கட்சிப்பணி செய்துள்ளேன். தேனி மாவட்டத்தில் நான் போகாத வீடுகளே கிடையாது.  எனக்கு சீட் கிடைக்கும் என நம்பிக்கை இருக்கிறது எனக்கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொடநாடு கொலை தொடர்பான ஓபிஎஸ் மகனின் ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு!

Published on 05/07/2022 | Edited on 05/07/2022

 

The Facebook post posted by OPS's son regarding the Kodanad Issue caused a stir!

 

'கொடநாடு கொலை வழக்கில் நீதி வேண்டும்' என்று ஓபிஎஸ்சின் இளைய மகன் ஜெயபிரதீப் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சில ஆண்டுகளுக்கு முன் கோத்தகிரி அருகே கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வரை விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனிப்படை போலீசாரும் இதுவரை 200 மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. இதற்கிடையே மறுபுறம் அதிமுகவில் ஒற்றைத் தலைமை சூடுபிடித்துள்ள நிலையில் 'கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் நீதி வேண்டும்' என்று தமிழக அரசுக்கு ஓபிஎஸ்சின் இளைய மகனான ஜெயபிரதீப் ஒரு கருத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

அந்த பதிவில்,

'உண்மை ஒருநாள் வெல்லும்

கொடநாடு சம்பவம் பற்றி நான்கு வருடமாக நான் எதுவும் பேசவில்லை என்று சில நண்பர்கள் கூறியிருக்கிறார்கள் அவர்களுக்கு தகுந்த விளக்கத்தினை நான் கூற கடமைப்பட்டிருக்கிறேன். எங்களது தெய்வம் குடியிருந்த கோயிலான பங்களாவில் சம்பவம் நடந்த ஆண்டு அதிமுக ஆட்சி புரிந்து கொண்டிருந்தது. மூன்று ஆண்டுகள் நல்லதொரு தீர்ப்பு வரும் என்று பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தேன்.

 

அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பொழுது அடுத்த அரசாங்கம் இந்த வழக்கை விரைவாக முடித்து தீர்ப்பு வழங்குவார்கள் என்று அமைதியாக காத்துக் கொண்டிருந்தேன். இரண்டு தினம் முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த கொடநாடு சம்பவத்தைப் பற்றிய தொகுப்பை பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக இருந்தது. நேற்றைய என்னுடைய பதிவில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது.

 

pp

 

மற்றவர்கள் மீது சந்தேகப்படுவதற்கு நான் காவல்துறையும் இல்லை பத்திரிக்கையாளரும் இல்லை சாதாரண மக்களின் ஒருவன்.ஒன்றரை கோடி தொண்டர்களையும் தனது பிள்ளையாக கருதிய எனது தாய் வீட்டில் இந்த அநீதி நடந்திருக்கிறது இதற்கு நியாயம்  கேட்க எங்கள் அம்மாவின் பிள்ளையாக எனக்கு கடமை இருக்கிறது. இந்த கொடநாடு சம்பவத்தை காலதாமதம் செய்து கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற செய்தி வருகிறது.

 

நமது கட்சிக்கு மேலும் கலங்கப்படுத்தாமல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் . இந்த வழக்கை விரைவாக முடித்து உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்ற  கழக உண்மை தொண்டனின் எண்ணத்தை தான் நான் பதிவிட்டு இருந்தேன்'  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக வும் பரவி வருகிறது. அதேபோல் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

 

Next Story

ஓ.பி.எஸ். மகனுக்கு எம்.எல்.ஏ. சீட்! - 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக ஏன் தாமதம்? 

Published on 08/03/2021 | Edited on 08/03/2021

 

ddd

 

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் பாமக, பாஜக, தேமுதிக, த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை சீட் என்றும், எந்தெந்த தொகுதிகள் என்றும் ஒதுக்கி வருகிறது அதிமுக.

 

இதனிடையே திடீரென கடந்த வாரம் அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில், சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார்; தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்; சென்னை ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார் போட்டியிடுகிறார்; தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் எஸ்.பி.சண்முகநாதன் போட்டியிடுகிறார்; திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை (தனி) சட்டமன்றத் தொகுதியில் எஸ்.தேன்மொழி போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 

இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தங்களுக்கு சீட் ஒதுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருவதால் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக தாமதமாகி வருகிறது என்கின்றனர் அக்கட்சியினர்.

 

மேலும், கம்பம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார். இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் கம்பம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபிரதீப் என இருக்கிறதாம். இந்நிலையில், பாஜகவும் கம்பம் தொகுதியைக் கேட்டு உறுதியாக நிற்பதால் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் தாமதமாவதற்கு அதுவும் ஒரு காரணம் என்கின்றனர்

 

இந்தத் தொகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் ஜக்கையன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி அணி, தினகரன் அணி என பிரிந்தபோது, ஜக்கையன் தினகரன் அணியில் இருந்தார். புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களில் ஒருவராக இருந்தவர், புதுச்சேயில் இருந்து திரும்பியதும், எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதாக சபாநாயகர் தனபாலை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போதிலிருந்து எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து வரும் ஜக்கையன், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார்.