Skip to main content

நஷ்டத்தில் இயங்கிய நிறுவனங்கள் கோடி கோடியாய் பாஜகவிற்கு நிதி கொடுத்தது எப்படி? - அமைச்சர் கேள்வி

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Minister Mano Thangaraj asked how companies that were running at a loss gave crores of funds to the BJP

 

தேர்தல் பத்திரம் விவகாரத்தில் அதிகப்படியாக பாஜக நிதி பெற்றுள்ள நிலையில் பல நிறுவனங்களை மிரட்டி பாஜக பணம் பறித்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை  அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 'பாஜக மிகப்பெரிய ஊழலில் சிக்கி இருக்கிறது. அதிலிருந்து மக்களுடைய கவனத்தை திசை திருப்புவதற்காக இந்திய பிரதமர் பல்வேறு வகைகளில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பேசுவதை தன்னுடைய வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 2019-ல் இந்த தேர்தல் பத்திரம் நடைமுறையை அவர்கள் கொண்டு வர முயற்சித்த நேரத்தில் ராகுல் காந்தி சொன்னார், 'இது ஒரு கொள்ளையடிக்க கூடிய முயற்சி என்று' சொன்னார். அது மட்டுமல்ல அன்று ஆர்பிஐ, தேர்தல் ஆணையம் போன்றவர்கள் இது வெளிப்படைத் தன்மையை இல்லாமல் ஆக்கிவிடும். இது தேர்தல் நடைமுறையை சீரழித்து விடும். ஊழலை ஊக்குவிக்க வாய்ப்பு உள்ளது என்றனர். ஆனால் எல்லாவற்றையும் மீறி அதை கொண்டு வந்து இன்று கோடி கோடியாக பணக்காரர்களை மிரட்டி, அடிபணிய வைத்து பணத்தை பெற்று இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் காண்ட்ராக்டர்களுக்கு சலுகைகளை கொடுத்து பணத்தை பெற்று இருக்கிறார்கள். அதேபோல நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த பல நிறுவனங்களிடம் பல கோடி ரூபாய் வாங்கி இருக்கிறார்கள். இது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களால் எப்படி நூற்றுக்கணக்கான கோடிகளை தரமுடிந்தது. வருமான வரியிலிருந்து அவர்களை பாதுகாப்பதற்காக நஷ்டக் கணக்கு காட்ட வைத்தீர்களா? இல்ல உண்மையிலேயே நஷ்ட கணக்கில் ஓடிக் கொண்டிருந்த நிறுவனங்களுக்கு நீங்கள் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்து கொடுத்து அதற்கு கையூட்டாக பணத்தைப் பெற்றீர்களா? என்ற கேள்வி எல்லாம் எழுந்துள்ளது. சிஏஜி அறிக்கையில் பல கோடி ஊழல் நடந்திருக்கிறது என தெரிவித்ததை தொடர்ந்து அதையும் ஒரு மூடி மறைக்க பல்வேறு சம்பந்தமில்லாத, சாதாரண மக்களுக்கு தேவையில்லாத பிரச்சனைகளை கிளப்பி மக்களை உணர்ச்சிவயப்படுத்தி திசை திருப்பினார்கள்' என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.