Skip to main content

அதிகாரிகளின் அலட்சியம்...வாக்களிக்க மறுத்த கிராமம்...வெறிச்சோடிய வாக்குசாவடி மையம்...!

Published on 27/12/2019 | Edited on 27/12/2019

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ளது மாயாகுளம். இந்த மாயாகுளம் ஊராட்சி மன்ற தலைவர் ( ரிசர்வ் தொகுதி ) பதவிக்கு மொத்தம் 11 பேர் போட்டியிடுகின்றனர். அதாவது மாயாகுளம், புதுமாயாகுளம், பெரிய மாயாகுளம், தொண்டாலை மேலக்கரை, பாரதிநகர், விவேகானந்தபுரம், கிழக்கு மங்களேஸ்வரி நகர் ஆகிய பகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 4980 பேர் உள்ளனர்.

 

Local body election-officers-villagers refused vote

 

 

இந்நிலையில் இன்று புதுமாயாகுளம் மற்றும் பெரியமாயாகுளம் பகுதிகளில் 1680 வாக்குகள் உள்ளன. இங்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட பூத் சிலீப்களில் மாயாகுளம்  என்று இல்லாமல் அதற்க்கு பதிலாக அருந்ததியர் காலணி என்று உள்ளதாக கூறி அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்து வாக்களிக்கமாட்டோம் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Local body election-officers-villagers refused vote

 



இதையடுத்து உடனடியாக அப்பகுதிக்கு வந்த தாசில்தார் வீரராஜா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கபாண்டியன், ரமேஷ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளது. இப்போது வாக்களியுங்கள், பின்னர் தவறு சரிசெய்து கொள்ளப்பட்டும் என்றார்.அதற்கு அப்பகுதி பொதுமக்கள் நீங்கள் சரிசெய்து கொடுங்கள் இல்லையென்றால் வாக்களிக்கமாட்டோம் என்று கூறி கலைந்து சென்றுவிட்டனர்.

 

Local body election-officers-villagers refused vote

 



இதேபோல் பெரிய மாயாகுளம் பகுதிகளிலும் அப்பகுதி பொதுமக்கள் தங்கள் ஊரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்பகுதி சேர்ந்த பேராசிரியர் கபீர் கூறுகையில், "கடந்த தேர்தல்கள் அனைத்திலும் மாயாகுளம், பெரிய மாயாகுளம் என அச்சிடப்பட்டு வந்தது. ஆனால் இந்த முறை ஊர் பெயர் மாற்றி வந்துள்ளது. இது அதிகாரிகள் அலட்சியமாகவும், பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக தெரிகிறது.

இந்த தவறை யார் செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.மேலும் அதிகாரிகளிடம் நாங்கள் எங்கள் உரிமைகளை தான் கேட்கிறோம். நாங்கள் சாலை மறியலில் ஈடுபடவில்லை,சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தவில்லை. ஆனால் அதிகாரிகள் ஏன் எங்களது கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை, ஊரின் பெயரை மாற்றினால் மட்டுமே வாக்களிப்போம் என்று கூறினார். இவ்வாறு அதிகாரிகள் செய்த தவறினால் இன்று பொதுமக்கள் வாக்களிக்காமல் சென்றுவிட்டனர். இதனால் வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி; கிராம மக்கள் எதிர்ப்பு!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Construction of Vallalar International Centre; Villagers issue

கடலூர் மாவட்டம் வடலூரில் ‘வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்ற வாக்குறுதியைக் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடலூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்.

இத்தகைய சூழலில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச மைய கட்டடம் கட்ட வடலூர் பெருவெளியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் இதற்கான பணிகள் தொடந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், மற்றும் பார்வதிபுரம் கிராமத்தினர் எனப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி தங்களது கண்டனத்தை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையும் புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பார்வதிபுர கிராம மக்களால் தானமாக கொடுக்கப்பட்ட இடமான பெருவெளியில் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது எனப் பார்வதிபுர கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.