Skip to main content

புரியும் வகையில் பேசுவேன்: கமல் 

Published on 21/02/2018 | Edited on 21/02/2018

 

kamal 61


மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை இன்று காலை துவங்கினார் கமல்ஹாசன். பின்னர் ராமேஸ்வரம் கணேஷ் மகாலில் மீனவர்களை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த கமல்,
 

அப்துல் கலாமின் வீட்டிற்கு சென்றதிலும், பள்ளிக்கு செல்ல நினைத்ததிலும் எந்த அரசியலும் இல்லை. கலாமின் பள்ளிக்கு செல்வதைதான் தடுக்க முடியுமே தவிர நான் பாடம் படிப்பதை யாராலும் தடுக்க முடியாது. நான் படித்த பாடத்தில் ஒரு பகுதி அப்துல்கலாமின் வாழ்க்கை. அவரது இல்லத்திற்கு சென்றதில் எனக்கு மகிழ்ச்சி. இறுதி ஊர்வலங்களில் நான் பங்கேற்பது இல்லை. என்னுடைய நம்பிக்கை அப்படி
 

மக்கள் முன் கொள்கைகளை அறிவிக்கவே எனக்கு விருப்பம். மதுரையில் என் கொள்கைகளை புரியும் வகையில் பேசுவேன். எனது அரசியல் பயணத்திற்கு ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்தார். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதே கொள்கை என்று சந்திரபாபு நாயுடு கூறினார். சினிமாவைவிட அரசியலில் அதிக பொறுப்பு எனக்கு உள்ளது. தமிழ் ரசிகர்கள் உள்ளத்தில் வாழ்ந்த நான் அவர்களது இல்லத்தில் வாழ ஆசைப்படுகிறேன். 
 

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எந்த தொழில் செய்பவராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். ஜனநாயக நாட்டில் யார வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இவ்வாறு கூறினார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

மநீம நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Manima Executive Committee, Date Notification for Executive Committee Meeting

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் வரும் 23.01.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 11:30 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. எனவே அனைத்து நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உலகின் மிக உயர்ந்த கட்டடத்தில் திரையிடப்பட்ட விக்ரம் ட்ரைலர்!

Published on 01/06/2022 | Edited on 01/06/2022

 

k

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி  ஃபகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் பிரம்மாண்டமாக இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகின. பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படம் வருகிற ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

 

இதற்கிடையே, 'விக்ரம்' படத்தின் ட்ரைலர் உலகின் உயரமான கட்டடத்தில் திரையிடப் படக்குழு முடிவு செய்திருந்தது. அதன்படி துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் உள்ள மிகப்பெரிய திரையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது திரையிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் ப்ரோமோவை ஒரு பிரம்மாண்ட மேடையில் வெளியிடப்போவதாகப் படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாவதற்கு முன்பு விக்ரம் பட புரோமோஷன் வேலைகள் வேறு எந்த படத்திற்கும் இல்லாத வகையில் விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது.