Skip to main content

நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்திவதில் தீவிரம் காட்டாத அரசு அதிகாரிகளுக்கு நீதிபதி கண்டனம்

Published on 24/02/2018 | Edited on 24/02/2018
kirupakaran

 

சென்னையில் பறக்கும் ரயில் திட்டத்துக்கு  மயிலாப்பூரைச் சேர்ந்த ராமசாமிக்கு சொந்தமான 487 சதுர அடி  கையகபடுத்தப்பட்ட நிலத்திற்கு, 2 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த இழப்பீட்டு தொகையை நில உரிமையாளர் ராமசாமி அதிகரித்து தரும் படி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், 33,44,750 ரூபாய் இழப்பீடாக கடந்த ஜூலை 31ஆம் தேதி உத்தரவிட்டார். மேலும் 1993ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு இதுவரை வழங்காததற்காக ஒரு லட்ச ரூபாய் வழக்கு செலவாக மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்டிருந்தார்.

 

 நீதிமன்றம் விதித்த கெடு கடந்த டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில்,  நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது தொடர்பாக ராமசாமி, நீதிமன்ற அவமதிப்பு  வழக்கை  தொடர்ந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன்,  அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்திவதில் தீவிரம் காட்டுவதில்லை என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம். மேலும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மனுதாரர் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பியும் பதிலளிக்காத  நில ஆர்ஜித அதிகாரியான(சென்னை மாவட்ட ஆட்சியர்) அன்புசெல்வன் மார்ச் 5ஆம் தேதி  நீதிமன்றத்தில் நேரில்  ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

Chief Minister M.K. Stalin's praise

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான நேற்று (செப்டம்பர் 15) காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். திட்டத்தை மாநிலம் முழுவதும் தொடங்கி வைக்கும் அடையாளமாக 13 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான ஏடிஎம் கார்டுகளை வழங்கினார்.  அதன்படி தேவி சம்பத் என்ற பெண்மணிக்கு இந்த திட்டத்திற்கான முதல் ஏடிஎம் கார்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

 

இதையடுத்து இந்த திட்டம் குறித்த காணொளி விழாவில் ஒளிபரப்பப்பட்டது. விழாவில் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்த பெண்கள் முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அரசு அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிவதற்கு அயராது உழைத்திட்ட அனைவரையும் இத்தருணத்தில் பாராட்டி மகிழ்கிறேன்.

 

இத்திட்டத்தில் களப்பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தன்னார்வலர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், நியாய விலைக் கடைப் பணியாளர்கள், நகராட்சி, மாநகராட்சிப் பணியாளர்கள்,  தமிழ்நாடு மின்னணு பணியாளர்கள் மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலர்களையும் இத்திட்ட நிகழ்வின் வெற்றியில் பாராட்டி மகிழ்கிறேன். களப்பணியாளர்களை வழிநடத்திய மாவட்ட ஆட்சியர்கள், அரசு செயலாளர்கள், தலைமைச் செயலாளர்கள் வரை உள்ள அனைத்து உயர் அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

 

Next Story

'பெண்களை குறிவைத்து பேசுவதா?' - ஹெச். ராஜாவிற்கு நீதிமன்றம் கடும் கண்டனம்  

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

 'Are you targeting women?' - The court strongly condemned H. Raja

 

'பெண்களை குறிவைத்து பேசுவதை ஏற்க முடியாது' என பாஜக பிரமுகர் ஹெச்.ராஜாவிற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

ஏற்கனவே நீதிமன்றத்தை அவதூறாக பேசியிருந்தது தொடர்பாக ஹெச்.ராஜாவுக்கு எதிராக அதிருப்திகள், கண்டனங்கள் தமிழகத்தில் கிளம்பியது. இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை குறிப்பாக அறநிலையத்துறை அதிகாரிகளின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை மிகவும் தரக்குறைவாக விமர்சித்து பேசியது தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகள் புகார் கொடுத்திருந்தனர். ஏழு காவல் நிலையங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

அதேபோல் பெரியார் சிலை குறித்து டிவிட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும் ஹெச்.ராஜா மீது தந்தை பெரியார் திராவிட கழகம் புகார் அளித்தது. புகார் அடிப்படையில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுகவின் கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும் அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டிருந்தது. தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருக்கக்கூடிய 11 வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஹெச்.ராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அப்பொழுது ஹெச்.ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அறநிலையத்துறை அதிகாரிகள் புகார்கள் அனைத்தும் செவிவழி செய்தி தான் அதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என வாதிட்டார். பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என ஹெச்.ராஜா தான் ட்வீட் போட்டார் என எந்த ஆதாரமும் இல்லை. அதற்கான ஆதாரங்களை காவல்துறை சமர்ப்பிக்கவில்லை என வாதிட்டார். கனிமொழி மீதான கருத்து என்பது அரசியல் ரீதான கருத்து என்றும் அதில் பாதிக்கப்பட்ட கனிமொழி புகார் தராமல் வேறு யாரோ புகார் கொடுத்தார்கள் என்றும் வாதிட்டு வழக்குகளை ரத்து செய்யக் கோரினார்.

 

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஹெச். ராஜாவுடைய பேச்சு தனிப்பட்ட நபர்களை மட்டும் அல்ல அனைவரையும் பாதிக்க வைக்கிறது. குறிப்பாக பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுகிறார்' எனக் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'பெண்களைக் குறி வைத்து அவதூறாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருமுறை இல்லை. பலமுறை இது போன்று பேசியுள்ளார் என கண்டனம் தெரிவித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.