Skip to main content

ஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தில் டாக்டர் சிவக்குமார் உள்பட 5 பேர் ஆஜர்

Published on 26/05/2018 | Edited on 26/05/2018
jayalalitha


மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
 

ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் ஓட்டுனர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிலரை ஆணையம் மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது.
 

அந்த வகையில் இன்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்தஷீலா நாயர், குடும்ப டாக்டர் சிவக்குமார், ராமலிங்கம் ஐ.ஏ.எஸ்., மற்றும் வீரபெருமாள் ஆகியோர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆகினர். 

படங்கள்: எஸ்.பி.சுந்தர்


 

சார்ந்த செய்திகள்