Skip to main content

தண்ணீருக்காக அரண் அமைத்த மாணவிகள்..! (படங்கள்)

Published on 28/08/2019 | Edited on 28/08/2019

 

தற்போது சென்னை மட்டும் இல்லாமல், தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துவருகிறது. அரசு மட்டுமின்றி பல தனியார் அமைப்புகளும் தண்ணீர் சேமிப்பதன் சிக்கனத்தை குறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். 
 

இன்று (28.08.2019) காலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கிரிஸ்டியன் கல்லூரி மாணவிகள் தண்ணீர் சேமிப்பின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக  மனித சங்கிலி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது “எதிர்காலத்திற்காகவும், தலைமுறைக்காகவும் தண்ணீரை சேமியுங்கள்” “ஆறுகள் அழிவதற்குள் அதன்மீது அக்கறை செலுத்துங்கள்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை பிடித்தவாறு மனித சங்கிலி அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்