Skip to main content

அதிகாரிகளின் அலட்சியம்... முற்றுகையிட்ட விவசாயிகள்...!

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனைகட்டிப் போரடித்தார்கள் தமிழர்கள் என்ற வரலாறு உண்டு. ஆனால் சமீப காலமாக போதிய மழை இல்லாமல் போனதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

 

Farmers issue

 



தற்போது சம்பா நெல் அறுவடை தீவிரமாகி உள்ளது. அதேபோல் உளுந்து பயிர் சாகுபடியும் தீவிரமடைந்துள்ளது. மேலும் நெல் அறுவடை செய்ய போதிய அளவில் அறுவடை இயந்திரம் கிடைக்கவில்லை. அதனால் விளைந்த நெல் மணிகள்  வயலிலேயே உதிர்ந்து நாசமாகி வருகிறது ஒரு பக்கம். இது சம்பந்தமாக விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் சமீபத்தில் நடத்திய விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் பல்வேறு விவசாயிகள் அதிக அளவில் நெல் அறுவடை இயந்திரம் கொண்டு வர வேண்டும் அப்போதுதான்  விளைந்த நெல்லை அறுவடை செய்து விற்க முடியும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Farmers issue

 



இப்படிபட்ட நிலையில் பல விவசாயிகள் விளைந்த நெல்லை உளுந்தை வீட்டுக்குக் கொண்டுவர முடியாமல் ஒருபக்கம் தவிக்கிறார்கள். விவசாயிகள் பலர் இச்சிரமங்களுக்கிடையே விளைந்தநெல்லை உளுந்தை அறுவடை செய்து தமிழ்நாடு அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து  சேர்க்கிறார்கள். அங்கேயும் உரிய நேரத்தில் விளை பொருட்களை கொள்முதல் செய்து கொண்டு பணம் தராமல் நாட்கணக்கில் விவசாயிகளை காக்க வைத்து பழைய பொருட்களைப் போல அவர்களை வெயிலில் காயப்போட போடுகிறார் அதிகாரிகள். நாட்கணக்கில் காத்திருக்க வைக்கிறார்கள்.

உதாரணமாக நேற்று திருக்கோவிலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு உள்ளனர். எனவே விளைந்த விவசாயிகளின் விளைபொருட்களை உரிய நேரத்தில் கொள்முதல் செய்து கொண்டு அவர்களுக்கு தர வேண்டிய பணத்தை உடனே கொடுக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் குடும்பம் வாழும். அவர்கள் வாழ்ந்தால்தான் நகரத்திலுள்ள வசதி படைத்தவர்கள் அரசு மற்றும் தனியார் கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் என பல தரப்பினரும் சாப்பிட உணவு கிடைக்கும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு அரசு விரைந்து விவசாயிகளின் விளைந்த பொருட்களை அறுவடை செய்யவும் அதை கொள்முதல் செய்யவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.