Skip to main content

மதுபானம் வாங்க குவிந்த முன்னாள் ராணுவ வீரர்கள்! கரோனா வழிமுறையை மீறிய மேலும் இரண்டு கடைகளுக்கு சீல்!

Published on 25/06/2021 | Edited on 25/06/2021

 

Ex-servicemen gather to buy alcohol! Two more stores sealed for violating Corona instructions

 

கடலூர் மாவட்டத்திலுள்ள ராணுவ வீரர்கள், ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ராணுவ கேண்டீன் கடலூர் புதுப்பாளையத்தில் இயங்கிவருகிறது. 4,000 முன்னாள் ராணுவ வீரர்கள் இதில் அட்டை பெற்று, இதன்மூலம் தங்கள் குடும்பத்திற்கு வேண்டிய மளிகைப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கி பயன்பெறுகின்றனர். மேலும், இதில் ராணுவ வீரர்களுக்கு என குறைந்த விலையில் உயர் ரக மதுபானங்கள் விற்கப்படுகிறது. அதேசமயம் மதுபானங்கள் குறிப்பிட்ட நாளில் மட்டும் விற்கப்படும்.

 

இந்நிலையில், கரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த ஒருமாதமாக இந்த ராணுவ கேன்டீன் மூடப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதையடுத்து அட்டைதாரர்களுக்கு வியாழக்கிழமை (24.06.2021) மதுபானம் வழங்கப்படுவதாக குறுந்தகவல் அனுப்பப்பட்டது. அதையடுத்து நேற்று கேன்டீன் திறக்கப்பட்ட நிலையில், 500க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் அதிக கூட்டம் நிலவியதால் நகராட்சி வருவாய் ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் சக்திவேல் தலைமையிலான அதிகாரிகள் அந்தப் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

 

Ex-servicemen gather to buy alcohol! Two more stores sealed for violating Corona instructions

 

வட்டாட்சியர் பலராமன் தலைமையில் அதிகாரிகள் கேன்டீனிற்கு சீல் வைத்தனர். இதனால் ஆவேசம் அடைந்த முன்னாள் ராணுவத்தினர் அதிகாரிகளிடமும் போலீஸாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து நீண்டநேரம் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு டோக்கன் விநியோகித்து, முறையாக வரிசையில் நிற்க வைத்து, பொருட்களை வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கேண்டீனுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு கரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடித்து மது விற்பனை நடைபெற்றது.

 

இதேபோல் கரோனா விதிமுறைகளை மீறி கடலூர் முதுநகரில் உள்ள காசுக்கடை தெருவில் ஒரு பாத்திர கடை செயல்படுவதாக நகராட்சி அதிகாரிகள் மற்றும் கடலூர் வட்டாட்சியருக்குத் தகவல் வந்தது. அதனையுடுத்து வட்டாட்சியர் பலராமன் தலைமையில் நகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் விரைந்து சென்று பாத்திரக் கடையில் விசாரணை நடத்தி, அந்தப் பாத்திரக் கடைக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டது. அதையடுத்து அந்தப் பாத்திரக் கடை உரிமையாளர்களிடம் மீண்டும் விதிமுறைகளை மீறி செயல்பட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரித்தனர்.

 

Ex-servicemen gather to buy alcohol! Two more stores sealed for violating Corona instructions

 

இதேபோல் பெண்ணாடத்தில் நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடப்பதாக திட்டக்குடி வட்டாட்சியர் தமிழ்ச்செல்விக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆய்வுப் பணியை மேற்கொண்டபோது, பெண்ணாடம் வால்பாறை அருகே உள்ள ஜவுளிக் கடை ஒன்றில் கதவைத் திறந்து வியாபாரம் செய்துகொண்டிருந்தனர். மேலும், கடையில் முகக்கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் வியாபாரம் நடந்துகொண்டிருந்ததைப் பார்த்த அதிகாரிகள் கடையைப் பூட்டி சீல் வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.