Skip to main content

கொஞ்சமாவது ரோஷம் இருந்தால், மோடி உடனடியாக... ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி!!

Published on 12/12/2018 | Edited on 12/12/2018

தமிழக காங்கிரஸ் கட்சியின்  முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்தார் 

அப்போது அவர் கூறும்போது, 

 

 

"காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பதவியேற்றபோது, மோடிக்கு இவர் சரிசமமாக இருப்பாரா, மோடிக்கு நிகராக இருப்பாரா என்றெல்லாம் சொன்னவர்கள், இன்றைக்கு மோடியை வீழ்த்தக்கூடிய மிகபெரிய சக்தியாக மாறியிருக்கிறார். ஓராண்டு காலத்திற்குள்ளாகவே பாஜகவின் மிகப்பெரிய கோட்டைகளாக திகழ்ந்தவற்றை, ராகுல் காந்தி தகர்த்து இருக்கிறார். இன்னும் நான்கு மாதத்தில் நடைபெற இருக்கிற மக்களவைத் தேர்தலிலும், காங்கிரஸை மிகப்பெரிய வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் பலம் ராகுல் காந்திக்கு உண்டு என சொல்கிறார்கள்.

.

evks

 

காங்கிரசும் அதன் கூட்டணிக்கட்சிகளும் வெற்றி பெறும் என்பது மட்டுமல்ல, ராகுல்காந்தி விரைவில் இந்த நாட்டின் பிரதமராக வருவதற்கான நல்ல சூழ்நிலைகள் ஏற்பட்டு இருக்கிறது. மோடியைப் பொறுத்தவரை இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு, அவருக்கு கொஞ்சமாவது ரோஷம் இருந்தால், உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். ஏனென்றால் என்னை யாரும் வீழ்த்த முடியாது, என்னை வீழ்த்த இந்தியாவில் யாரும் பிறக்கவில்லை என்றெல்லாம் எள்ளி நகையாடினார். ராகுல்காந்தியை சிறுவன், பொடியன் என்றெல்லாம் கேலி பேசினார். ஆனால், இன்றைக்கு மிகப்பெரிய தோல்வியைப் பெற்று இருக்கின்ற மோடி, உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். ஜனநாயகத்தில் கொஞ்சமாவது நம்பிக்கை இருக்குமேயானால், அவர் கண்டிப்பாக ராஜினாமா செய்ய வேண்டும். 

 

 

அதேபோல், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், 24 மணி நேரமாக எதையோ பிதற்றிக்கொண்டு இருக்கிறார். அவரது பேச்சு மரணஓலம் போல் இருக்கிறது. நாங்கள் இந்த இந்த தேர்தலில் தோல்வி அடையவில்லை. இது வெற்றிகரமான தோல்வி என்று தமிழிசை சொல்கிறார். இது என்ன வெற்றிகரமான தோல்வி என்று எனக்குப் புரியவில்லை. ஒன்று ஆணாக இருக்க வேண்டும்; இல்லையென்றால் பெண்ணாக இருக்க வேண்டும்; நடுவிலே ஏதோ ஒன்று என்பது போல, வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை என்பது போல் தமிழிசை சொல்வது இருக்கிறது.தோல்வியில் சிறிய தோல்வி, பெரிய தோல்வி என்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை. 10 ரூபாய் திருடினாலும், ஒரு லட்ச ரூபாய் திருடினாலும் திருடன், திருடன் தான். ஆகவே, தோல்வி என்பதை சிறிய தோல்வி, பெரிய தோல்வி என்று சப்பைக்கட்டு கட்டுவது, தமிழிசைக்கு ஏற்றதல்ல. அவரைப் பொறுத்தவரை விரக்தியின் உச்சகட்டத்தில் சென்று விட்டார். 

 

 

தினந்தோறும் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுவது எல்லாம் விரயமாகிக் கொண்டு இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, தமிழிசை பாஜகவை விட்டு வெளியேறி ஒரு தனிக்கட்சி ஆரம்பித்தால், ஏதாவது கொஞ்சம் உபயோகமாக இருக்கும். ஏதாவது ஒரு ஊரிலே, ஒரு வார்டிலே வெற்றி பெறுவதற்கான சூழ்நிலை ஏற்படும். 

 

 

தேர்தல் முடிவு என்பதை ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றியாகவும், மோடியின் நடவடிக்கைகள், திட்ட்டங்களில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது. ஆகவே, இது ராகுல்காந்திக்கு வெற்றியாகவும், மோடிக்கு தோல்வியாகவும் அமைந்துள்ளது. 

 

கஜா புயல் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து கமிஷன் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஈரோட்டிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் லட்சக்கணக்கான போர்வைகள் விற்பனையாகாமல் முடங்கிக் கிடக்கின்றன. அவற்றை நிவாராணத்திற்கு வழங்க வாங்காமல், ஆந்திராவில் இருந்து குறைந்த விலையில், தரம் குறைந்த போர்வைகளை வாங்கி விநியோகித்து, கமிஷன் அடித்து இருக்கிறார்கள். இங்கு பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கு உதவி செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்கே முடங்கிய போர்வைகளை அவர்கள் நிவாரணப் பணிக்கு பயன்படுத்தி இருந்தால், இங்குள்ள நெசவாளர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஏனென்றால் ஈரோடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருக்கிற நெசவாளர்களின் போர்வைகள் தரம் வாய்ந்ததாகவும், விலை குறைவாகவும் இருக்கிறது. அதைப்பயன்படுத்தாமல் கமிஷனுக்காக வெளி மாநிலங்களில் இருந்து போர்வைகளை வாங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது. 

 

 

புயல் நிவாரணத்திலும் ஊழல், கமிஷனில் அரசு ஈடுபடுமானால், கண்டிப்பாக தமிழக மக்கள் அதிமுகவிற்கு டெபாசிட் கூட கிடைக்காத நிலையை ஏற்படுத்துவார்கள்.

 

அரசு மதுபானக்கடைகளை நாங்கள் மூடுவோம் என்று சொன்னவர்கள், இன்று புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் பல மதுக்கடைகளை புதிதாகத் திறந்து இருக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது. அங்குள்ள மக்கள் ஒருநாள் உணவிற்கே கஷ்டப்படும் நிலையில், அவர்களுக்கு கிடைக்கும் 200, 300 ரூபாயை மதுக்கடைகளில் செலவிட இந்த அரசு ஏற்பாடு செய்து விட்டால், அவர்களது குடும்பத்தின் கதி என்னவாகும் என நினைத்துப் பார்க்க வேண்டும். ஆகவே, அங்கு டாஸ்மாக் கடைகளைத் திறந்தது தவறு; உடனடியாக கடைகளை மூட வேண்டும். 

 

திமுக கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. ஸ்டாலின் மிகத்தெளிவாக அறிவித்து இருக்கிறார்கள். இந்த கூட்டணியைப் பொறுத்தவரை சில செய்திகள் பத்திரிகைகளில் பெரிதுபடுத்தப்படுகின்றன. திருமாவளவனுக்கும், வைகோவிற்கு கருத்து வேறுபாடு என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால், நேற்றே அவர்கள் இருவரும் சந்தித்து பேசி விட்டனர். ஆகவே, திமுக -காங்கிரஸ் கூட்டணி மிக பலமாக இருக்கிறது. வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி புதுச்சேரியையும் சேர்த்து 40 இடங்களிலும் வெற்றி பெறும். 

 

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ்க்கு எவ்வளவு எண்ணிக்கை, எந்தெந்த இடங்கள் என்பதெல்லாம், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு, ஸ்டாலினும், ராகுல்காந்தியும் பேசி முடிவு எடுப்பார்கள்.  

 

பாஜகவிற்கு எதிரான திமுக - காங்கிரஸ் கூட்டணி மிக வலுவாக, மிக பலமாக இருக்கும். மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் பெற்ற வெற்றியை, தமிழக மக்கள் தங்களுடைய வெற்றியாகக் கருதி கொண்டாடுகின்றனர். எல்லா இடங்களிலும் மக்கள் எனக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தது, தமிழகத்திலும் மோடிக்கு சமாதி கட்டப்படும் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கின்றனர். 

 

 

குட்கா ஊழலில் அமைச்சர் தவறு செய்து இருக்கிறார் என்பதை ஆதாரத்தோடு பிடித்து இருக்கின்றனர். ஆகவே, அவரது உதவியாளரை விசாரணைக்கு அழைப்பது, சமையல்காரரை விசாரணைக்கு அழைப்பது, ஓட்டுநரை விசாரணைக்கு அழைப்பது என்பதெல்லாம் தேவையற்ற ஒன்று. நேரடியாக, சம்பந்தப்பட்ட அமைச்சரையே கைது செய்து விசாரணை செய்ய வேண்டும்.

 

தமிழகத்தில் பாஜக அநாதையாகத்தான் நிற்கும் என்று நான் நினைக்கிறேன். இந்த வெற்றிகளுக்குப் பிறகு, இங்குள்ள எந்தக்கட்சியும் அவர்களோடு கூட்டு சேர வாய்ப்பில்லை. அதிமுகவோ, தினகரன் கட்சியோ, யாரும் நெருப்பை தங்கள் தலையில் கொட்டிக்கொள்ள மாட்டார்கள்.  விவசாயிகளுக்கு பாதகமில்லாமல் உயர்மின் கோபுரங்கள் அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்டால், அதற்குரிய நஷ்டஈட்டை வழங்க வேண்டும். 

 

 

கமல் கட்சி ஆரம்பித்து விட்டார். ரஜினியைப் பொறுத்தவரை அவரது படம் வெளிவரும் முன்பு ஏதாவது ஸ்டண்ட் அடிக்க வேண்டும் என்பதற்காக 20 சதவீதம், 30 சதவீதம்  பணி முடிந்தது என்று கதை சொல்லிக் கொண்டு இருக்கிறார். அவர் கட்சி ஆரம்பிப்பார் என்ற நம்பிக்கையும் இல்லை. கட்சி ஆரம்பிக்காமல், நிம்மதியாக இருங்கள்; பாஜகவின் வலையில் விழுந்து விடாதீர்கள் என்பதுதான் ரஜினிக்கு நான் சொல்லும் அறிவுரை.

 

ரிசர்வ் வங்கி தலைமை அதிகாரி, பொருளாதார ஆலோசகர் ராஜினாமா செய்ய மோடியின் மோசமான ஆட்சியே காரணம். இத்தனை பேர் ராஜினாமா செய்வதை விட, மோடி ராஜினாமா செய்து விட்டால் பிரச்சினை தீரும்.  

 

‘தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் செயல்பாடுகள் குறித்து கேட்டபோது’, ‘தேர்தலிலே காங்கிரஸ் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியுடன் உங்களைப் பார்த்து பேசிக்கொண்டு இருக்கிறேன். இந்த நேரத்தில் அநாவசியமான கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஏனேன்றால் வெற்றியைக் கொண்டாடும் நேரத்தில் சில தேவையில்லாத, விஷயங்களைப் பேச விரும்பவில்லை’ என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.