Skip to main content

டெல்லி பாராளுமன்ற சாலையில் தொடர் உண்ணாவிரதம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

Published on 23/03/2018 | Edited on 23/03/2018


 

parliamentdelhi



காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மத்திய அரசை வலியுறுத்தி டெல்லி மார்ச் 26 முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, 
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மத்திய அரசை வலியுறுத்தி 24.03.2018 காலை7-00 மணி மன்னார்குடி பேருந்து நிலையம் அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ரயில் நிலையம் சென்றடைதல். 8.30 மணி மன்னையிலிருந்து பாசஞ்சர் ரயில் மூலம் 10.15க்கு மயிலாடுதுறை சென்றடைதல்.
 

 11.30 க்கு மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு (சோழன்) திருச்சிஎக்ஸ்பிரஸ் மூலம் சென்னை பயணம். 12.00 மணியளவில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் வரவேற்ப்பு. மாலை 6.00 மணி சென்னை எழும்பூர் சென்றடைவது. உடன் எழும்பூரிலிருந்து ஊர்வலமாக சென்னை சென்ரல் ரயில் நிலையம் சென்று இரவு 10.o0 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் டெல்லி புறப்படுதல். 25 ரயில் பயணம். 26ந் தேதி காலை 7.00 மணி டெல்லி ரயில் நிலையம் சென்றடைதல். அன்று காலை 10.00 மணிக்கு டெல்லி பாராளுமன்ற சாலையில் திட்டமிட்டப்படி உண்ணாவிரதப் போராட்டம் துவங்கும் என தெரிவித்துள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா; புறக்கணிக்கும் திமுக

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

Inauguration of New Parliament Building; DMK ignores

 

புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.

 

தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும் இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.

 

கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் வருகிற மே 28-ம் தேதி சவார்க்கர் பிறந்த நாளன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், "புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல" எனப் பதிவிட்டிருந்தார். நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்குப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிக்க இருப்பதாக எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திறப்பு விழாவை புறக்கணிக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் திமுகவும் நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார்.

 

 

Next Story

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பியின் கார் மோதல்...

Published on 12/02/2019 | Edited on 12/02/2019
car

 

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தடுப்பு மீது காங்கிரஸ் எம்.பி. கார் மோதியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மணிப்பூர் எம்.பி. தோக்சோம் மெய்ன்யாவின் கார் கட்டுப்பாட்டை இழந்ததால் தடுப்பில் மோதியது. திடீரென கார் தடுப்பில் மோதியதால் பாதுகாப்பு வீரர்கள் அந்த காரை சுற்றி வளைத்தனர். பின்னர், அந்த காரை பறிமுதல் செய்து பாதுகாப்பு வீரர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நாடாளுமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.