Skip to main content

பேருந்திற்குள் வடிந்த மழைநீர்- பயணிக்கு ரூபாய் 50,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு! 

Published on 30/10/2022 | Edited on 30/10/2022

 

Court ordered to pay Rs 50,000 compensation to the passenger who got rain water inside the bus!



அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தில் பயணிக்க பணம் வசூலித்துவிட்டு, மழைநீர் வடிந்த பேருந்தில் பயணிக்க வைத்ததற்காக பாதிக்கப்பட்ட நபருக்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

சோமசுந்தரம் என்ற வழக்கறிஞர் கடந்த 2018- ஆம் ஆண்டு குடும்பத்துடன் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது மழை பெய்ததால், பேருந்துக்குள் தண்ணீர் வடிந்துள்ளது. மேலும், மாற்று பேருந்தின் இருக்கைகள் சரியில்லை என்றும், இதனால் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், நாகப்பட்டினம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

 

பயணியின் குடும்பத்திற்கு 50,000 ரூபாய் இழப்பீடும் வழக்கு செலவு தொகையாக 10,000 ரூபாய் மற்றும் பயணக் கட்டணம் 2,926 ரூபாயைச் சேர்த்து 62,926 ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்