Skip to main content

நாடு என்னவாகும் என உலுக்குகிறதா மனம்? -கமல்ஹாசனின் கடவுள்!

Published on 29/03/2020 | Edited on 29/03/2020

‘வேண்டாம் மகனே! 108 ஆம்புலன்ஸ் வேலை!’ என்னும் தலைப்பில், மகன் பாண்டித்துரையிடம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அவரது பெற்றோர் பாசத்தோடு கெஞ்சுவதும், சமூக அக்கறையோடு அவர் மறுப்பதும்,   வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறித்து, நேற்று நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பாண்டித்துரை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சிலாகித்திருக்கிறார்.
 

 Is the country shaking as it turns out? -The God of Kamal Haasan!

 

‘108 ஓட்டுநர் பாண்டித்துரை..
நீங்கள் என் நம்பிக்கையின் நாயகன்.
இவர்போல, தன்னலம் பாராது
நாட்டிற்காக முன்னிற்கும் வீரர்கள் தான்
நம் தேசத்தை இயக்குபவர்கள்.
பாசத்தில் கதறும் அவரின் பெற்றோரின் குரல்,
உள்ளத்தை உலுக்கும்போது நாடு என்னவாகும்?
என்று கேட்கும் அந்த மனம்தான் கடவுள்!
கட உள்’

கமல்ஹாசனின் இந்த ட்விட்டர் பதிவு, சேவையாளர்களுக்கு ஆறுதலாகவும், எதையும் வேடிக்கை பார்ப்பவர்கள் மனதில் சேவை உணர்வை தூண்டுவதாகவும் அமைந்திருக்கிறது. 

 

 Is the country shaking as it turns out? -The God of Kamal Haasan!

 

 

 

சார்ந்த செய்திகள்