Skip to main content

ஊழல் மகாராணி ஜெயலலிதாவும் முத்தமிழ் அறிஞர் கலைஞரும் ஒன்றா..? கடம்பூர் ராஜூவுக்கு தி.மு.க. இளைஞர் அணி எச்சரிக்கை..!!!

Published on 19/09/2018 | Edited on 19/09/2018

 
தி.மு.க.விலுள்ள கடைசித் தொண்டனின் கால்செருப்புக்கு சமம்.!  முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களையும், ஊழல் மகாராணி ஜெயலலிதாவையும் ஒன்றாக ஒப்பிடுவது சரித்திரப்பிழை என்பதை மங்குனி அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் இனியாவது புரிந்து கொள்ளவேண்டும் என தி.மு.க. மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் எஸ்.ஜோயல் தனது அறிக்கையில் எச்சரிக்க, தூத்துக்குடி மாவட்ட அரசியலில் பரப்பரப்புத் தொற்றியுள்ளது.

 

 

dmk

 

அவர் வெளியிட்ட அறிக்கையிலிருந்து.,   " தமிழகத்தில் ஐந்துமுறை முதல்-அமைச்சராக இருந்து பேரறிஞர் அண்ணாவின் வழியில், பொற்கால ஆட்சி தந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள். தமிழுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் தன்னை தந்து, உழைத்த உத்தம தலைவர் கலைஞர் அவர்கள். கலைஞர் அவர்கள் வயது முதிர்வால் மரணம் அடைந்த பிறகு அவரது உடலை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்வதற்கு எங்கள் தலைவரும், கலைஞர் அவர்களின் தவப்புதல்வருமான மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தகுதி பார்க்காமல் நேரில் போய் சந்தித்து வேண்டுகோள் வைத்தார்.

 

முதுகெலும்பு இல்லாத மோடியின் அடிப்பொடியான தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அந்த வேண்டுகோளை நிராகரித்த காரணத்தினால் நாங்கள் உயர் நீதிமன்றத்தை நாடினோம். ''மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கலைஞருக்கு மெரீனா கடற்கரையில் இடம் வழங்கவேண்டும்'' என்று இந்த அரசின் கன்னத்தில் அறைந்தார் போன்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  நீதிமன்றத்தின் உத்தரவிற்கு பிறகு மெரீனா கடற்கரையில் பேரறிஞர் அண்ணாவின் சமாதி அருகில், மறைந்த எங்கள் மாபெரும் தலைவர் கலைஞர் அவர்களது உடல், அவர் தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் என்ற முறையில்  முறைப்படி முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

 

 

மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்வதற்கும், அரசு மரியாதை செய்வதற்கும் முழுத்தகுதி உடையவர் திமுக தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை இந்த நாடே அறியும். மறைந்த  உங்கள் தலைவி ''ஊழல் ராணி'' ஜெயலலிதா போன்று உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி இல்லை எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள். முத்தமிழ் அறிஞர் என்று உலக நாடுகளே போற்றிய உத்தம தலைவர் கலைஞர் அவர்களுக்கு மெரீனாவில் வழங்கப்பட்ட இடம் இந்த அரசு போட்ட பிச்சை என்றால், ஊழல் மகாராணி என்று உலகமே அறிந்த ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட இடம் எந்த வகையில் போடப்பட்ட பிச்சை என்பதை அமைச்சர் கட்டிங் ராஜூ அவர்கள் தான் விளக்கவேண்டும்.

 

''செக்குக்கும், சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் நக்குகிற நாயைப்போல முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களையும், ஊழல் மகாராணி ஜெயலலிதாவையும் ஒன்றாக ஒப்பிடுவது சரித்திரப்பிழை என்பதை மங்குனி அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் இனியாவது புரிந்து கொள்ளவேண்டும். உலக மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு மெரீனாவில் இடம் கொடுத்து விடக்கூடாது என்பதில் வன்மமாகவும், வக்கிரமாகவும் இருந்த இந்த மானம் கெட்ட ஊழல் அரசை கண்டித்து உணர்த்தும் வகையில் கழகத்தலைவர் மாண்புமிகு., தளபதியாரின் பெரும் முயற்சியால் உயர் நீதிமன்றம் தலைவர் கலைஞர் அவர்களுக்கு மெரீனாவில் இடம் வழங்கி உத்தரவிட்டது.

 

 

பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகளான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதற்கேற்ப மக்களுக்காவே பணியாற்றிய தலைவர் கலைஞர் அவர்களின் உழைப்பு, தியாகம், பொறுப்புணர்வு, தமிழகத்தின் வளர்ச்சிக்காக அவர் நிறைவேற்றிய திட்டங்கள் இவற்றையெல்லாம் அறிந்து உயர் நீதிமன்றம் தலைவர் கலைஞர் அவர்களுக்கு மெரீனாவில் இடம் கொடுக்க உத்தரவு வழங்கியதை இந்த நாடே அறியும்.

 

 

தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பதவியை பறித்து, கூவத்தூரில் கூத்தடித்து, சசிகலாவின் காலை நக்கி, கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்த அறிவுகெட்ட எடப்பாடி பழனிச்சாமி அரசு எழுப்பிய தடைகளை எல்லாம் தகர்த்து எறிந்துவிட்டார் எங்கள் தலைவர் மாண்புமிகு., தளபதி அவர்கள். இதனை அமைச்சர் கமிஷன் ராஜூ அவர்கள் இனியாவது புரிந்து கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.