Skip to main content

கலெக்டர் – அரசு ஊழியர்களின் முடியாத பனிப்போர்! கைதான அரசு ஊழியர்கள்! 

Published on 21/03/2018 | Edited on 21/03/2018
Collector - Govt Employes Fait


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமிக்கும், வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறையை சேர்ந்த சங்கத்தின் நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரியதாகி அரசு ஊழியர் சங்கம் இதில் தலையிட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் 2ந்தேதி திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த்துறை, அங்கன்வாடி சங்கங்களை சேர்ந்தவர்கள் துறைவாரி சங்கங்களின் கூட்டமைப்பு என்கிற பெயரில் ஆட்சியர் கந்தசாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஊழியர் விரோத போக்கில் உள்ளார். ஆய்வு கூட்டங்களில் கடுஞ்சொற்களால் ஊழியர்களை வசைப்பாடுகிறார், பெண் ஊழியர்களிடம் டிவி சீரியல் பார்க்கிறியா என கேலி செய்கிறார், சத்துணவு அங்கன்வாடி மையப்பணியாளர்களை நீங்கள் சமூக சீர்கேடுகள் என விமர்சிக்கிறார், மக்கள் குறை தீர்வு நாள் கூட்டங்களில் அரசு ஊழியர்களை அவமானப்படுத்தும் விதமாக வேண்டுமென்றே பேசுவது, இதுதான் நீ வாங்கும் கடைசி சம்பளம் என கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசுவது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைக்கு பலமுறை சென்ற சங்க நிர்வாகிகளை அழைத்து பேசமறுத்து அவமானப்படுத்துவது, சத்துணவு ஊழியர்களின் பதவி உயர்வு போன்றவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். 500க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்த அந்த ஆர்ப்பாட்டத்துக்கு திடீரென வந்த ஆட்சியர் கந்தசாமி, போராட்டத்தில் கலந்துக்கொண்ட சங்கத்தினரிடம் தன்னை பற்றி கூறிய குற்றச்சாட்டுக்களை மறுத்து விளக்கம் சொன்னார்.
 

police


இதனை கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி, சங்க நிர்வாகிகளை அறைக்கு அழைத்து தனியாக பேச வேண்டும் என்றனர். ஆட்சியரோ, எல்லோர் முன்பும் பேசுவோம் என்றார்கள். இதற்கு நிர்வாகிகள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அவர் பேசக்கூடாது என நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்க அங்கிருந்து அகன்ற கந்தசாமி, செய்தியாளர்களிடம், சங்க நிர்வாகிகள் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ளாமல், அவர்கள் மீது நான் நடவடிக்கை எடுக்ககூடாதென ஊழியர்களை தூண்டி விடுகிறார்கள் என்றார்.

இந்த பிரச்சனை அரசின் மேல்மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆட்சியர் தன் நிலையில் இருந்து இறங்கி வரவில்லை. இந்நிலையில் இன்று காலை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். அதிகளவில் ஊழியர்கள் வருவார்கள் என நூற்றுக்கும் அதிகமான போலிஸார் நுழைவாயில் முன்பு குவிக்கப்பட்டனர். போராட்டத்துக்கு வந்ததோ 250 ஊழியர்கள் தான்.

kanthasamy IAS



மதியம் 12.30 வரை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியை கண்டித்து கோஷம் எழுப்பினர். அதன்பின், எங்களை அழைத்து பேச வேண்டும் என்கிற கோரிக்கையோடு ஆட்சியரை கண்டித்து பேசினர். அதன்பின் ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைய முயல, போலிஸார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்ற முயல அரசு ஊழியர்களுக்கும் – போலிஸாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின் போலிஸார் எச்சரிக்கை செய்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

அரசு ஊழியர்களின் இந்த போராட்டத்தால் வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெறிச்சோடி காணப்பட்டன.

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.