சென்னை குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதிநீர் திறக்கப்பட்டது. கண்டலேறு அணையிலிருந்து முதல் கட்டமாக சென்னைக்கு 1,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆந்திராவில் திறக்கப்படும் நீர் 5 நாட்களில் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டுக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் 8 டிஎம்சி நீர் தரக்கோரி கோரிக்கை விடுத்த நிலையில் ஆந்திர அரசு 5 டிஎம்சி வரை மட்டுமே தண்ணீர் திறக்க வாய்ப்பு.
![chennai water demand krishna river opening](http://image.nakkheeran.in/cdn/farfuture/mMWf_Ltmm0eMR1_CxvyBfe0mnc0DMH1AHYcktxWVtJ0/1569389921/sites/default/files/inline-images/dc-Cover-5jqjh7pavs6rav5svvbl59jgq3-201712310.jpg)
தற்போது 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாலைக்குள் 2,000 கனஅடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.