Skip to main content

ஆர்.எஸ்.பாரதி மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு

Published on 28/09/2018 | Edited on 28/09/2018
rs

 

திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

கோவை பேரூரில் கடந்த 26 ம் தேதி  நடைபெற்ற திமுக கண்டன பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசியதாக அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன் பேரூர் போலீசில் புகார் அளித்தார்.  இதையத்து ஆர்.எஸ்.பாரதி,  திமுக எம்.எல்.ஏ. கார்த்திக், திமுக மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் மீது 5 பிரிவுகளில் பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்