Skip to main content

தேனி கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

Ban on bathing in Theni Kumbakkarai Falls

 

தேனி கும்பக்கரை அருவியில் மூன்று பேர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

தேனி மாவட்டம் கும்பக்கரையில் நேற்று பிற்பகல் ஒரு மணி முதல் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கனமழை பொழிந்தது. இதன் காரணமாக தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பொழுது அங்கு குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளில் மூன்று பேர் அடித்துச் செல்லப்பட்டனர் .தொடர்ந்து வனத்துறையின் முயற்சியால் மூவரும் மீட்கப்பட்டனர். அதேபோல் மறுகரையில் சிக்கிக் கொண்டிருந்த 30 பேர் வனப்பகுதி வழியாக அழைத்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்டனர்.

 

இந்த நிலையில், தற்போது தொடர்ந்து கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் அளவிற்கு பாதுகாப்பான சூழல் நிலவும் வரை குளிக்கத் தடை விதிப்பதாக வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

முதல்வரின் நம்பிக்கைக்குரியவரானார் அமைச்சர் ஐ.பெரியசாமி!

Published on 08/06/2024 | Edited on 08/06/2024
Minister I. Periyasamy became the cm stalin confidant

திண்டுக்கல், தேனி தொகுதிகளில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களையும் அண்ணன் ஐ.பெரியசாமி வெற்றி பெற வைத்துவிடுவார்என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு என்று தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் லட்சுமிபுரத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். அதுபோல் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியின் தி.மு.க. கூட்டணி சிபிஎம் வேட்பாளராக சச்சிதானந்தத்தை அறிவித்த உடனே மாநிலத் தலைவரான பாலகிருஷ்ணன் திண்டுக்கலில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியைச் சந்தித்தார். அப்போது அதிக ஓட்டு வித்தியாசத்தில் சச்சிதானந்தத்தை வெற்றி பெற வைப்பேன் எனக் கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்துதான் கட்சிபொறுப்பாளர்களை உசுப்பிவிட்டு தேர்தல் பணியில் அமைச்சர் ஐ.பி. ஆர்வம்காட்டி வந்தார். அதுபோல் தேனி மாவட்ட பொறுப்பு அமைச்சராக அமைச்சர் ஐ.பெரியசாமி இருந்து வருவதால் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வனையும் வெற்றி பெறவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கட்சிப் பொறுப்பில் இருக்கும் உடன் பிறப்புக்களிடம் கருத்து வேறுபாடுகளை எல்லாம் மறந்து இந்தத் தேர்தலில் பணியாற்றுவதின் மூலம் தங்கத்தமிழ்ச்செல்வனை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார்.

Minister I. Periyasamy became the cm stalin confidant

இந்த நிலையில்தான் தேனி பிரச்சாரத்திற்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இத்தொகுதியில் போட்டி போடும் தங்கத்தமிழச்செல்வனை மூன்று லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள் என்றால் தேனி தொகுதியில் தங்கி மக்களின் குறைகளையும், கோரிக்கைளையும் நிறைவேற்றி கொடுப்பேன் என்று கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த முதல்வர்தான் இரண்டு வேட்பாளர்களையும் அமைச்சர் ஐ.பெரியசாமி வெற்றி பெற வைப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று மேடையிலேயே இருந்த அமைச்சர்களான ஐ.பெரியசாமி மற்றும் சக்கரபாணி முன்னிலையில் கூறினார்.

அதைத் தொடர்ந்து தீவிரமாக தேர்தல் களத்தில் ஆர்வம் காட்டிய அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல் தொகுதியில் சிபிஎம் வேட்பாளரின் சின்னமான அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னம் தொகுதி மக்கள் மத்தியில் அறிமுகம் இல்லாததால் அதை வாக்காள மக்களின் மனதில் பதிய வேண்டும் என்பதற்காக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோருடன் ஆலோசனை செய்த அமைச்சர் ஐ.பெரியசாமி உடனே தொகுதியில் உள்ள கட்சிப் பொறுப்பாளர்களை உசுப்பிவிட்டு நகரம் முதல் பட்டி தொட்டி வரை அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தை மக்களிடம் பதிய வைக்க வேண்டும் என்பதற்காக சின்னத்தை பிட் நோட்டீஸ் மூலமாகவும், விசிறிகளாகவும் தயார் செய்து வீடு வீடாக கொடுத்து பிரச்சாரம் செய்து மக்கள் மனதில் பதிய வைத்தனர்.

Minister I. Periyasamy became the cm stalin confidant

அதன் அடிப்படையில்தான் இரண்டு அமைச்சர்களின் தொகுதியில் தலா ஒரு லட்சம் ஓட்டுகளுக்குமேல் வாங்கி கொடுத்ததின் பேரில்தான் 4லட்சத்து 43 ஆயிரத்து 821 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று தமிழகத்திலேயே மூன்றாம் இடத்தை பிடித்ததுடன் மட்டுமல்லாமல் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணியின் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளர் முகமது முபாரக் தவிர, பா.ம.க. வேட்பாளர் திலகபாமா, நாம் தமிழர் கட்சி உட்பட அனைவருமே டெபாசிட் இழந்தும் இருக்கிறார்கள். அதுபோல் தேனி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் களமிறங்கி உள்ள தங்கத் தமிழ்ச்செல்வனையும் அதிக ஓட்டுக்களில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொகுதியில் இருக்கும் இரண்டு மாவட்டங்களிலிருக்கும் எம்.எல்.ஏ.க்களான சரவணக்குமார், கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன் மற்றும் உசிலம்பட்டி, சமயநல்லூர் தொகுதிகளில் உள்ள கட்சிப் பொறுப்பாளர்களிடம் ஆலோசனை செய்து தேர்தல் களத்தில் இறக்கி தீவிரமாக மக்கள் மத்தியில் ஆளும் கட்சியின் சலுகைகளையும், சாதனைகளையும் சொல்லி வாக்காள மக்களிடம் ஓட்டு கேட்டு வைத்ததின் பேரில்தான் 2லட்சத்து 78 ஆயிரத்து 825 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தங்கத்தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்று இருக்கிறார்.

Minister I. Periyasamy became the cm stalin confidant

இதில் எதிர்த்து போட்டியிட்ட டிடிவி தினகரனைத் தவிர அதிமுக வேட்பாளர் நாராயணசாமி மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதன் உட்பட பத்துக்கும் மேற்பட்ட சுயேட்சைகளும் டெபாசிட் இழந்து இருக்கிறார்கள். அந்த அளவுக்கு தேனி, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிட்ட தங்கத்தமிழ்ச்செல்வனையும், சச்சிதானந்தத்தையும் முதல்வர் சொன்ன ஒரு வார்த்தைக்காக அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்திருக்கிறார். அந்த அளவுக்கு முதல்வரின் நம்பிக்கைக்கு உரியவராக அமைச்சர் ஐ.பெரியசாமி இருந்து வருகிறார் என்று கட்சியினரே பேசி வருகின்றனர்.

Next Story

தேனியில் வாக்கு எண்ணிக்கை மந்தம்; போலீசுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வாக்குவாதம்!

Published on 04/06/2024 | Edited on 04/06/2024
Voting in Theni is sluggish

தேனி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையானது தேனி அருகே உள்ள கம்பவர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ரவுண்டில் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் பத்தாயிரம் ஓட்டுவித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வந்தார். ஆனால் அதிகாரப்பூர்வமாக தேர்தல் அதிகாரி அறிவிக்காமல் காலதாமதப்படுத்தி வந்தார். அதுபோல் தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி, சோழவந்தான், ஆண்டிப்பட்டி,பெரியகுளம், கம்பம், போடி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் கல்லூரியில் ஒவ்வொரு பகுதியிலும் எண்ணப்பட்டு வந்தது. இப்படி எண்ணப்பட்டு வருவதில் ஆளுங்கட்சியான தங்கத்தமிழ்ச்செல்வன் ஒவ்வொரு சுற்றிலும் தங்கத்தமிழ்ச்செல்வனும் டிடிவியும் மூன்று இலக்கிலேயே வாக்குகள் வாங்கி வந்தனர்.

ஆனால் அதிமுக வேட்பாளருக்கு ஒரு சில தொகுதிகளில் எண்ணக்கூடிய எண்ணிக்கை மையங்களில் மூன்று இலக்குகள் வாங்கினார்களே தவிர மற்ற தொகுதிகளில் எண்ணக் கூடிய மையங்களில் இரண்டு இலக்கில் தான் ஓட்டுக்கள் வாங்கி வருகிறார். இதனால் முதல் இடத்தை ஆளுங்கட்சி வேட்பாளரான தங்கத்தமிழ்ச்செல்வன் பிடித்து வருகிறார். இரண்டாவது இடத்தை டிடிவி தினகரன் தக்க வைத்து வருகிறார். மூன்றாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பிடித்து வருகிறார். இதைக்கண்டு மனம் நொந்துபோன பூத் எண்ணிக்கைக்கு வந்த அதிமுகவினர் பாதியிலேயே வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியேறினார்கள். ஆனால் இப்படி ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்த தகவல்களை முழுமையாக பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்காமல் காலதாமதப்படுத்தி வந்தனர். 

Voting in Theni is sluggish

ஆனால் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும்  வாக்கு எண்ணிக்கை நடைபெற்று யார் எந்த கட்சி வேட்பாளர் முன்னிலையில்  இருக்கிறார் என்பதையும் அறிவித்து வருகிறார்கள். ஆனால் தேனி  பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை காலையில் இருந்தே மந்தமாக  இருந்தது. அப்படியிருந்தும் 10 மணிக்கு மேலாகியும் கூட பல மாவட்டங்களில்  இரண்டாவது சுற்று, மூன்றாவது சுற்று விபங்கள் பத்திரிக்கை மீடியாக்களுக்கு  தெரியப்படுத்தியும் வருகிறார்கள். ஆனால் இங்கு முதல் சுற்றில் எந்த  வேட்பாளர் முன்னிலையில் இருக்கிறார் என்பது கூட தேர்தல் அதிகாரிதெரிவிக்கவில்லை. இதனால் கோபமடைந்த 50க்கும் மேற்பட்டபத்திரிக்கையாளர்கள் தேர்தல் அதிகாரியிடம் கேட்க சென்றனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிகாரிகள், பத்திரிகையாளர்களை ரூமைவிட்டு நீங்க வெளியே போக கூடாது என்றும் விதிமுறைகளை மீறிசெயல்படுகிறீர்கள் என்று தடுத்தனர். அதற்கு பத்திரிக்கையாளர்கள் நாங்கள் தேர்தல் அதிகாரியிடம் விபரம் கேட்கத்தான் செல்கிறோம் என்று கூறிவிட்டுசென்றனர். அப்படியிருந்தும் பத்திரிகையாளர்களை போலீஸ் அதிகாரிகள் தடுத்ததில் வாக்குவாதம் ஏற்பட்டதால் உடனிருந்த செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகள் மற்றும் சிலர் அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.

Voting in Theni is sluggish

அப்போது அங்கு வந்த தேர்தல் அதிகாரியான மாவட்ட கலெக்டரிடம் பத்திரிக்கையாளர்கள் முறையிட்டனர். அதன் அடிப்படையில் இனிமேல் உடனுக்குடன் ஓட்டு எண்ணிக்கை விபரங்கள் கொடுக்கப்படும் என்று கூறினார்.அதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள தங்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூமிற்கு சென்றனர். இதனால் வாக்கு எண்ணிக்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.