Skip to main content

தூக்கி வீசப்பட்ட பிறந்த 3 நாட்களே ஆன ஆண் குழந்தை!

Published on 05/12/2019 | Edited on 05/12/2019

பிறந்து மூன்று நாட்களே ஆன நிலையில் தர்கா அருகில் கீழே விட்டுச் சென்ற ஆண் குழந்தையை சைல்டு லைன் அமைப்பினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

A baby boy who was born just 3 days after being thrown!


புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகில் உள்ள ஒடுகம்பட்டி ஒலியுல்லா தர்கா அருகில் வியாழக்கிழமை (04.12.2019) மாலை பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தையை யாரோ விட்டுச் சென்றுள்ளனர். குழந்தை கிடப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சைல்டு லைனுக்கு தகவல் சொல்ல, அவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மருத்துவமனையில் தயாராக இருந்த முதல்வர் மீனாட்சிசுந்தரம் தலைமையிலான மருத்துக் குழுவினர் குழந்தைக்கு அவசர சிகிச்சை அளித்தனர். குழந்தையை வளர்க்க முடியாத யாரோ கொண்டு வந்து போட்டிருக்களாம் என்று கூறப்படுகிறது.



 

சார்ந்த செய்திகள்