Skip to main content

ஆடியோ ஆதாரம் இருக்கிறது... நீதிமன்றத்தில் நடிகர் சூரி தகவல்! 

Published on 07/12/2020 | Edited on 07/12/2020

 

Audio evidence regarding land issue... Actor Suri informed in court!

 

தன்னிடம் நில மோசடி செய்ததற்கான ஆடியோ ஆதாரம் உள்ளதாக நடிகர் சூரி, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 

நகைச்சுவை நடிகர் சூரி, "தன்னிடம் நிலம் வாங்கித் தருவதாக திரைப்படத் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜா மற்றும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையான ஓய்வு பெற்ற டி.ஜி.பி ரமேஷ் குடவாலா ஆகியோர் 2.70 கோடியை வாங்கி ஏமாற்றியதாக அடையாறு காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். இந்த வழக்கானது, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற வேண்டும் என நடிகர் சூரி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. 

 

இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஓய்வு பெற்ற டி.ஜி.பி குடவாலா மீதான புகாருக்கு, தங்களிடம் ஆடியோ ஆதாரம் உள்ளது என, சூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நடிகர் சூரி தன்வசம் உள்ள ஆடியோ ஆதாரத்தை காவல்துறையிடம் ஒப்படைக்க, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கு, நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.  

 

 

சார்ந்த செய்திகள்