Skip to main content

"திருவொற்றியூர் குடியிருப்புவாசிகளுக்கு மாற்று வீடுகள், ரூபாய் 1லட்சம் நிவாரணம்"- தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு!

Published on 27/12/2021 | Edited on 27/12/2021

 

"Alternative housing for Tiruvottiyur residents, Rs 1 lakh relief" - Tamil Nadu Chief Minister's announcement!

 

திருவொற்றியூர் அரிவாக்குளம் குடியிருப்பில் தங்கி இருந்தவர்களுக்கு மாற்று வீடுகள், ரூபாய் 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

 

இது தொடர்பான, தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பில், "திருவொற்றியூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் 1993-ல் கட்டப்பட்ட பழைய குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 24 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்து, அதனால் மக்கள் பாதிப்படைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். 

 

விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை தா.மோ.அன்பரசனை நிவாரண பணிகளை மேற்பார்வையிட அனுப்பி வைத்து, விபத்தில் வீடிழந்த குடும்பத்தினருக்கு உடனடியாக மாற்று குடியிருப்புகள் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன். பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்பில் இருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் துவங்க 24 குடும்பங்களுக்கும் தலா ரூபாய் 1லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். 

 

இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் பழைய குடியிருப்புகளின் விபரங்களைச் சேகரிக்கவும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன்". இவ்வாறு முதலமைச்சரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்