Skip to main content

காவிரிக்காக அனைத்து கட்சி கூட்டம் அரசியல் நாகரீகத்தின் மறுமலர்ச்சி : கொ.ம.தே.க. ஈஸ்வரன்

Published on 22/02/2018 | Edited on 22/02/2018
eswaran

 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டம் பற்றி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது...

 

’’காவிரி நதிநீர் உரிமைக்காக தமிழக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சிகளும் கலந்து கொண்ட கூட்டம் காலத்தின் தேவை என்றாலும் இது ஒரு வரலாற்று நிகழ்வு. கர்நாடகாவில் அனைத்துக்கட்சிகளும் ஒன்று சேர்ந்து தமிழகத்திற்கு எதிரான சதி திட்டங்களை தீட்டி அதன் மூலம் வெற்றி கண்டு கொண்டிருக்கும் போது தமிழகம் ஏமாறுகிறதா என்ற ஐயப்பாடு ஒவ்வொரு தமிழனின் ஆதங்கமாக இருந்தது. தமிழக முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவரும் ஒருசேர முடிவு எடுத்து தமிழகத்தின் அனைத்துக்கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களை அழைத்து காவிரி நதிநீர் உரிமைக்காக தீர்மானம் நிறைவேற்றி இருப்பதும், அதில் நாங்களும் கலந்து கொண்டு எங்களது கருத்துக்களை தெரிவித்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது.

 

காவிரி நீர் உரிமைக்காக மொத்த தமிழகமும் ஒன்றுபட்டு நிற்கிறது என்ற செய்தியை இந்த நாட்டுக்கு இன்றைய கூட்டம் பிரகடனப்படுத்தி இருக்கிறது. கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்ற அரசியல் நோக்கத்திற்காக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்ற காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். தொடர்ந்து உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசு இப்போது மட்டும் தீர்ப்புக்கு தலைவணங்குமா என்ற ஐயப்பாடு எழுப்பப்பட்டாலும், நம்முடைய காவிரி நீர் உரிமைகளை பெற எவ்வளவு அழுத்தம் கொடுக்க முடியுமோ அவ்வளவு அழுத்தம் கொடுத்தாக வேண்டும்.

 

இன்றைக்கு முதலமைச்சர் தலைமையில் கூடிய அனைத்துக்கட்சி கூட்டம் அனைத்துக்கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது. இனி தமிழர்களின் உரிமைகளுக்காக எந்தவொரு பொதுவான பிரச்சினைகளிலும் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று முதலமைச்சர் உறுதி அளித்திருப்பது தமிழர் பண்பாட்டின் வெளிப்பாடு.  மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் எதிராக தமிழகத்தில் நடத்தப்படும் போராட்டங்கள் எந்த அளவுக்கு காவிரி நீர் விவகாரத்தில் பலனளிக்கும் என்று தெரியாது. 

 

தமிழர்களுக்கு வரும் வயிற்று வலியை கர்நாடகா புரிந்துக்கொள்ள வாய்ப்பில்லை. அது அவர்களுக்கு வந்தால் தான் தெரியும். நீலகிரி மலையிலே உருவாகின்ற தண்ணீர் தான் மோயாற்றின் கிளை ஆறுகள் மற்றும் பல வாய்க்கால்களின் மூலமாக தமிழக எல்லையிலிருந்து கேரளாவுக்குள்ளும், கர்நாடகாவுக்குள்ளும் பயணிக்கிறது. அந்த நீர் தான் கர்நாடகத்தினுடைய விவசாய நிலங்களை பசுமையாக வைத்திருக்கிறது. தமிழக எல்லைக்கு உட்பட்டு நீலகிரி மலையில் உற்பத்தியாகின்ற தண்ணீரை தமிழக அரசு அணைக்கட்டி தடுத்து தமிழகத்தின் பக்கம் திருப்பிவிடும் முயற்சிகளை மேற்கொண்டால் காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடகா ஒத்துழைப்பு தர வாய்ப்பு இருக்கிறது.

 

தமிழகத்தின் முதலமைச்சரும், அமைச்சர்களும் எதிர்க்கட்சி தலைவரை பார்த்து புன்னகைக்க கூட கூடாது என்ற நிலை மாறி, இன்று சிரித்துப் பேசி கருத்துகளை பகிர்ந்துக்கொள்கின்ற விதம் தமிழக அரசியல் நாகரீகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது’’என ஈஸ்வரன் கூறியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளாளர் முன்னேற்ற சங்க உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Vellalar Munnetra Sangha High Level Executive Meeting

தமிழ்நாடு வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் கழகத்தின் பாராளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து உயர்மட்ட நிர்வாகிகள் முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் ஆர்.வி. ஹரிஹரூன் தலைமையில் இன்று (12-03-24) நடைபெற்றது. இதில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் சார்பில் பாராளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்த கருத்துகளை உயர்மட்ட நிர்வாகிகள் வழங்கினார்கள். மேலும், இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சோழிய வேளாளர் நலச் சங்கம் சார்பாக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள். இதில் தேர்தல் கூட்டணி, ஆதரவு நிலைப்பாடுகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் ஆலோசனைகள் மேற்கொண்டு இறுதி முடிவை வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் & கழகத்தின் உயர் மட்ட கமிட்டி விரைவில் அறிவிக்கும் என்று முடிவு செய்யப்பட்டது .

Next Story

‘இந்தியா’ கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம் - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
We will make the India coalition win to protect India CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக இன்று (23.02.2024) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “மாவட்டக் கழகச் செயலாளர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டிய அவசர அவசியம் காரணமாகத்தான் நேற்று சட்டமன்றம் முடிந்தவுடன் இன்று காணொலி வாயிலாக நடத்துகிறோம். நேற்று நான் சட்டமன்றத்தில் ஒரு அழைப்பு விடுத்தேன்.  கலைஞரின் நினைவிடமும், பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடமும் வருகிற 26 ஆம் தேதி, மாலை 7 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் திறக்கப்படுகிறது.

தாய் தமிழ்நாட்டையும் திமுகவையும் காத்த தலைவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியின் அடையாளமாக மிகப் பிரமாண்டமாக இந்த நினைவகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. விழாவாக இல்லாமல் நிகழ்ச்சியாக நாம் நடத்துவதால் அந்நிகழ்வில் நீங்கள் அனைவரும் தவறாது வருகை தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அடுத்து, உங்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சி கலந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதிவாரியாக நடைபெற்ற கூட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியடைந்துள்ளன. மிகப் பிரமாண்டமாக நடத்திக் காட்டிவிட்டீர்கள். பெரும்பாலான கூட்டங்களை டிவியில் பார்த்து பிரமித்தேன்.

அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே மாதிரியாக மேடை அமைக்கப்பட்டு, எல்.ஈ.டி திரைகளுடன் பிரம்மாண்ட கூட்டங்களாக இருந்தன. மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள், டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட கூட்ட புகைப்படங்களும் மலைப்பை ஏற்படுத்தியது. இதனை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டங்கள் பரவலாக மாநிலம் முழுவதும் கழகத்தினரை உற்சாகப்படுத்தியிருக்கின்றன. தேர்தல் பணிகளைப் பொறுத்தவரை, நாம் மிக வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

We will make the India coalition win to protect India CM MK Stalin

புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதியிலும் நாம் தான் முழுமையான வெற்றி பெறுவோம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அந்த வெற்றி மகத்தானதாக இருக்க வேண்டும். நாம் பெறும் வாக்குகள் அபரிமிதமாக இருக்க வேண்டும். நம்முடைய ஒவ்வொரு திட்டம் பற்றியும் படித்துவிட்டு, எளிமையாகப் பரப்புரைச் செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் அரசு, நமது அரசு என எளிமையாகப் புரியும் வகையில் பரப்புரை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் எனத் தொடங்கிய தேர்தல் பரப்புரை, நமது சாதனைகள், நிதிநிலை அறிவிப்புகள், மத்திய பா.ஜ.க. அரசின் அநீதிகள் ஆகியவற்றை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்லும். இந்தியாவைக் காக்க‘இந்தியா’வை வெற்றி பெறச் செய்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.