Skip to main content

சேவை துண்டிப்பு - தமிழகம் முழுவதும் ஏர்செல் சேவை மையங்கள் முற்றுகை!

Published on 21/02/2018 | Edited on 21/02/2018
aircel


தமிழகம் முழுவதும் ஏர்செல் நிறுவன நெட்வொர்க் சேவை பெரும்பாலும் துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல்களில் இன்கம்மிங், அவுட் கோயிங் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

கடலூர், பாண்டிச்சேரி போன்ற இடங்களில் இருக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு நாட்களாக தொலைதொடர்பு சேவை கிடைக்காமல் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதனால் பல ஊர்களில் இருந்து பல பேர் வேறு நெட்வொர்க்கில் இருந்து தொடர்பு கொண்டு ஏர்செல்லில் இருந்து எதற்கும் பேசமுடியவில்லை என்றும், கஷ்டமர் கேருக்கு தொடர்பு கொண்டாலும் போகவில்லை என்றும் ஏர்செல் ஏஜென்சியிடம் தொடர்பு கொண்டால் பெரும்பாலும் ஏஜென்சி கைபேசி நம்பருக்கும் போன் போகவில்லை என்றும் புகார் கூறுகின்றனர். 

பல வருடங்களாக ஏர்செல் நம்பரை பயன்படுத்தி வருவதால் ஏர்செல் நம்பரையே ஆதார், வங்கி, கேஸ் இன்னும் போன்ற பல நிறுவனங்களுக்கு கொடுத்து உள்ளோம். வாட்ஸ் அப்பில் ஏர்செல் நஷ்டத்தில் இயங்குவதாகவும், இதனால் பல மாநிலத்தில் சேவை நிருத்தப்பட்டு உள்ளதாகவும் தமிழ்நாட்டிலும் இந்த மாதத்திற்குள் சேவை நிருத்தப்படும் என்றும் செய்திகள் உலாவந்து கொண்டிருக்கின்றன.

அதற்கு தகுந்தாற்போல் இரண்டு நாட்களாக ஏர் செல் சேவை மேற்கண்ட மாவட்டங்களில் இருந்து பொது மக்கள் சேவை நின்று விட்டது. இதனால் பெரிதும் மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட தொலைதொடர்பு அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களும் ஒரு நிமிடங்கள் கூட காலம் தாழ்த்தாமல் தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 

aircel


இந்நிலையில் புதுச்சேரியிலுள்ள ஏர்செல் அலுவலகத்தை வாடிக்கையாளர் முற்றுகையிட்டனர். மாற்று ஏற்பாடுகள் செய்வதாக கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.

இதேபோல், கோவை, திருப்பூர், மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஏர்செல் நிறுவன நெட்வொர்க் சேவை பெரும்பாலும் துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல்களில் இன்கம்மிங், அவுட் கோயிங் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர்.

ஈரோட்டில் நூற்றுக்கணக்கான ஏர்செல் வாடிக்கையாளர்கள் கடும் கோபத்துடன் இன்று ஏர்செல் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.

இதனால் பதட்டம் ஏற்பட போலீசார் குவிக்கப்பட்டனர். ஏர்செல் அலுவலக ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் கேட்கும் வேறு தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மாற்றி கொடுக்கும் வேலையை செய்து வருகிறார்கள்.

- சுந்தரபாண்டியன், ஜீவாதங்கவேல்

சார்ந்த செய்திகள்

Next Story

தொழிலதிபர் சிவசங்கரன் சொத்துகள் முடக்கம்

Published on 01/02/2019 | Edited on 01/02/2019
s

 

ஐடிபி வங்கியில் 470 கோடி கடன் பெற்று  அதனை திருப்பிச்செலுத்தாமல் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஏர்செல் முன்னாள் நிறுவனர், தொழிலதிபர் சிவசங்கரன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.    இதைத்தொடர்ந்து சிவசங்கரன் மீது அமலாக்க இயக்குநரகமும் வழக்கு பதிவு செய்தது.   சிவசங்கரன் நிறுவனங்கள் மேலும் 523 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாகவும் சிபிஐயில் வழக்கு உள்ளது.


இந்நிலையில், பணமோசடி புகாரில் தொழிலதிபர் சிவசங்கரனின் 224.6 கோடி சொத்துக்களை  முடக்கியதாக அமலாக்கத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.   சென்னையில் எம்.ஆர்.சி.நகர், தி.நகரில் உள்ள சிவசங்கரன் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.  முடக்கப்பட்ட சொத்துக்கள் சிவசங்கரனின் சிவா குழும நிறுவனங்களுக்கு சொந்தமானவை. ஆக்செல் சன்ஷைன் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.

 

சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் சிவசங்கரன் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு கூறியுள்ளது.


 

Next Story

வாடிக்கையாளர் வழக்கு: பதில் அளிக்க ஏர்செல், மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Published on 05/03/2018 | Edited on 05/03/2018

 

சென்னையை சேர்ந்த  சரவணகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் 9 ஆயிரம் டவர்கள் அமைக்கப்பட்டு 25 லட்சம் பேர் ஏர்செல் தொலை தொடர்பு இணைப்பை பயன்படுத்தி வரும் நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் 6500 டவர்கள் வாடகைபாக்கி காரணமாக  செயல்படவில்லை என ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை ஆதிகாரி சங்கர நாராயணன் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
 

மேலும் பிப்ரவரி 22 முதல் ஏர்செல் இணைப்பில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டதன் காரணமாக, ஏர்செல் இணைப்பை பயன்படுத்த முடியாமல் லட்சக்கணக்காண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  90% வாடிக்கையாளர்களால் ஏர்செல் இணைப்பை பயன்படுத்த முடியவில்லை என்பதால் மத்திய அரசும், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் ஏர்செல் நிறுவனம் மீதும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எம்.என்.ப்பி. மூலம் வாடிக்கையாளர்கள் மாறும் வரையிலோ அல்லது முழுமையாகவோ வாடிக்கையாளர்களுக்கு முறையான சேவை வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
 

ஏர்செல் நிறுவனத்தில் ஆதார், மானிய சிலிண்டர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இணைக்கப்பட்டுள்ளதால்,  திடீரென இணைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளர்கள் அளவில்லாத சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்பதால் டிராய் தலையிட்டு ஏர்செல் நிறுவனத்தின் மீது நடடிக்கை எடுக்க வேண்டும்" என மனுவில் கோரியிருக்கிறார்.
 

இந்த வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கு குறித்து மத்திய தொலைதொடர்பு துறை, டிராய் மற்றும் ஏர்செல் நிறுவனம் ஆகியவை ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
 

சி.ஜீவா பாரதி