Skip to main content

பொம்பள மாதிரி இருந்தா கல்லை கூட விடமாட்டீங்களாடா!கஸ்தூரி அதிரடி ட்வீட்!

Published on 11/06/2019 | Edited on 11/06/2019

சமீபத்தில் இளைஞர் ஒருவர் நண்பர்களுடன் தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றுள்ளார்.அப்போது அங்கு இருந்த சிலைகளுடன் போட்டோ எடுத்துள்ளார்.மேலும் பெண் சிலைகளை கட்டிப் பிடித்து கொண்டும், முத்தம் கொடுத்தும்  போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.இந்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது.இது தொடர்பாக முஜிபுர் ரகுமான் என்ற இளைஞனை போலீஸார் கைது செய்து திருச்சி சென்ட்ரல் ஜெயிலில் அடைத்தனர்.



இது சம்மந்தமாக நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆவேசமாக ட்விட் செய்துள்ளார்.அதில் பிடிச்சு ஜெயில்லே போட்டுட்டாங்க. ரம்ஜான் கொண்டாடினானாம் ! வாக்குமூலம் குடுத்துருக்கான். ச்சை !  பொம்பளமாதிரி இருந்தா கல்லை கூட விட்டு வைக்கமாடீங்களாடா? முஜிபுர் ரஹ்மான் ! எவ்வளவு பெரிய தலைவர் பேரை வச்சிக்கிட்டு எவ்வளவு சின்ன புத்தி செயல்! என்று கோவமாக ட்விட் செய்துள்ளார்.

சார்ந்த செய்திகள்