கமலும், ரஜினியும் திரையில் நடித்தால் போதும், இனி தரையில் நடிக்க வேண்டாம் என இயக்குநர் கௌதமன் தெரிவித்துள்ளார்.
திரைப்பட இயக்குநர் கௌதமன் நெடுவாசல் போராட்டம் தொடங்கியது முதல் பல முறை நெடுவாசல் போராட்ட களத்திற்கு வந்து ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது நீட் தேர்வுக்கு விளக்கு வேண்டும் என்பதை தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள எம்.பி.க்களை நேரில் சந்தித்து மனு கொடுத்து வருகிறார். இந்த நிலையில் திருச்சி எம்.பி. குமாரை சந்தித்த பிறகு நெடுவாசல் வந்தார். அங்கு அப்பகுதி மக்களிடம் கலந்துரையாடிய பிறகு தெருமுனைப்பிரசாரத்தில் பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும் போது.. நீட் தேர்வுக்கு விளக்கு அளிக்க வேண்டும் என்பதை தமிழக அரசு சட்டமாக இயற்றி கொடுத்த போதும் மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை. அதனால் தான் தமிழக எம்.பிகளை பாராளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி மனு கொடுத்து வருகிறோம். மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால் பாராளுமன்றத்தை முற்றுகையிடவும் செய்யலாம்.
நீட் தேர்வுக்கு 10 நாட்கள் முன்பு வரை விளக்கு அளிக்கவில்லை என்றால் ஜல்லிக்கட்டுக்காக, நெடுவாசலகுக்காக தமிழகத்தில் மாணவர்கள் கொந்தளித்து எழுந்ததைப் போல நீட்டுக்காகவும் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.
இயற்கை எரிவாயு எடுப்பதற்காக இந்திய அரசு பல சூழ்ச்சியான சட்ட திருத்தங்களை செய்து வைத்துள்ளது. அந்த சட்டத்தை எடுத்துக் கொண்டு இரவில் கையெழுத்தை போட்டுக் கொண்டு நெடுவாசல் வர முயற்சிக்கலாம். ஆனால் எந்த வடிவத்திலும் நெடுவாசலுக்குள் அவர்களை இந்த மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். மீறி வந்தால் எங்கள் மக்களை பிணமாக்கிவிட்டு தான் உள்ளே வர முடியும். இது எங்கள் வாழ்வாதார உரிமை
மத்திய பெட்ரோலியதுறை அமைச்சர் தர்மேந்திபிரதானின் பேச்சு திமிறான, ரத்த வெறிபிடித்த பேச்சாக உள்ளது. தமிழக அரசை பயமுறுத்தி அனுமதி வாங்கி வந்தாலும் நாங்கள் விடமாட்டோம்.
கமலும் ரஜினியும் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு.. அவர்கள் திரையில் நடித்தால் போதும் இனி தரையில் நடிக்க வேண்டாம். தமிழகத்தில் மாணவர்கள், மீனவர்கள், விவசாயிகள் போராட்டம் நடந்த போது எல்லாம் மோடிக்கு பின்னால் இருந்து கொண்டார்கள். இப்போது முதல்வர் கனவில் அரசியலுக்கு வருகிறார்கள். கதாநாயகனாக நடித்தவர்கள் இனி அப்பா, தாத்தா வேடங்களில் நடிக்கலாம் முதலமைச்சராக வேடம் போட வேண்டாம். எங்கள் மக்கள் ஒரு போதும் ஏமாறமாட்டார்கள்.
மேலும்.. பாரம்பரிய, சித்த மருத்துவத்திற்கும் கட்டுப்பாடுகளை விதிக்கப்படுகிறது. 3.80 லட்சம் தொண்மை கொண்ட தமிழனத்தின் உள்ள சித்தர்கள் எழுதிய சுவடிகளில் இருந்து கண்டறியப்படும் மருத்துவத்தை அழிக்க அரசாங்கம் துணை போக வேண்டாம் என்றார்.
கமலும், ரஜினியும் திரையில் நடித்தால் போதும்: இயக்குநர் கௌதமன்
சார்ந்த செய்திகள்
Next Story
“இதெல்லாம் ‘பி.எஸ் 2’ வில் இருந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க கூடும்” - படக்குழுவுக்கு கௌதமன் எச்சரிக்கை
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் பொன்னியின் செல்வன் படம் குறித்து கலவையான விமர்சனத்தை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் கௌதமன், "பொன்னியின் செல்வன் படம் வெற்றி பெறுவது, வசூலை வாரி குவிப்பது எல்லாம் மகிழ்ச்சிக்குரிய விஷயம். ஆனால், 50 ஆயிரம் ஆண்டு பழமையான தமிழ் இனத்தின் வரலாற்றை கூறும் போது சரியாக சொல்ல வேண்டும். உலகத்தில் எத்தனையே பேரரசு இருந்திருக்கிறது. ஆனால் சோழ பேரரசு மட்டும் தான் 350 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே மன்னர் வழிவந்தவர்கள் ஆண்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட பேரரசை சொல்லும் பொழுது நீங்கள் தமிழ் உணர்வுடன் சொல்வது என்பது மிகவும் முக்கியமானது. சோழர்களுடைய கொடி புலிக்கொடி என்று உலகத்துக்கே தெரியும். அப்படிப்பட்ட புலிக்கொடியை உங்களால் படத்தில் காட்ட முடியவில்லை என்றால் நீங்கள் எல்லாம் எதற்காக படம் எடுக்க வேண்டும். அப்போ உங்களுடைய நோக்கம் என்ன?
பொன்னியின் செல்வன் படத்திற்கு வசனம் எழுதிய ஜெயமோகன், விஜயால சோழனுக்கு முந்தைய தலைமுறை தெலுங்கர் என்று சொல்கிறார். உங்களுக்கு எல்லாம் என்ன வரலாற்று ஆய்வு இருக்கிறது. தஞ்சையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்தவனை நீங்கள் எப்படி தெலுங்கர் என்று சொல்கிறீர்கள். கங்கைகொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக வைத்து உலகத்தில் உள்ள முக்கால்வாசி நாட்டை ஆட்சி செய்த அவனை ஒரு தமிழன் என்று ஏன் சொல்ல முடியவில்லை. அப்புறம் எதற்கு நீங்கள் இந்த படத்தை கையில் எடுத்தீர்கள்.
வெற்றிமாறன் ராஜராஜ சோழனை இந்து இல்லை என்று சொன்னதற்கு மட்டும் குதிக்கிறீங்க. ஆயிரம் வருடத்திற்கு முன்பு எங்கே இருந்தது இந்து மதம். சைவம், வைணவம் மட்டும் தானே இருந்தது. இந்து என்ற சொல்லை வெள்ளைக்காரர்கள்தான் கொண்டுவந்தார்கள். இந்து என்ற சொல் வெள்ளைக்காரன் கொண்டுவந்தது என்று இன்றைக்கு இந்துக்களின் அடையாளமாக சொல்லப்படக்கூடிய சங்கராச்சாரியார் எதிர்த்திருக்கிறார். அதையே வெற்றிமாறன் சொன்னால் மட்டும் கசப்பாக இருக்கிறதா. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழர்களுக்கு வைணவம், சைவம் என்று சமயம் இருந்திருக்கிறது. ஆனால் இந்து மதம் இல்லை. அப்படி இருக்கையில் நீங்கள் எதை மறைக்க பார்க்கிறீர்கள்.
'பொன்னியின் செல்வன்' படம் பான் இந்தியா படமாக வெளியாக வேண்டும் என்பதால் இந்துத்துவாவை பற்றி பேச வேண்டும் என்பதுதான் உங்களின் நோக்கம். இதற்கு ஏன் எங்கள் வரலாற்றை மறைக்க பார்க்கிறீர்கள். ஆதித்த கரிகாலனை யார் கொன்றது, பாண்டியர்களா கொன்றார்கள். வட தமிழகத்திற்கும், தென் தமிழகத்திற்கும் ஏன் சண்டை மூட்டி விட பார்க்கிறீர்கள். கல்கி வேண்டுமென்றால் மாற்றி எழுதியிருக்கலாம். ஆனால் தமிழனை தமிழனே கொன்றான் என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. தைரியம் இருந்தால் யார் கொன்றார்கள் என்ற உண்மையை சொல்லுங்கள். ஆளுமையுடன் படம் எடுங்கள். தமிழன் தன்னுடைய வரலாற்றை சொல்லவில்லை என்றால், தமிழன் அல்லாதவர்கள் தங்களுடைய வரலாறாக மாற்றுவார்கள் என்பது 'பொன்னியின் செல்வன்' படத்தின் மூலம் வெளியே தெரிகிறது.
இந்த மாதிரி வேலையெல்லாம் இரண்டாம் பாகத்தில் இருந்தால், மிகவும் கடுமையான எதிர் விளைவுகளை படக்குழு சந்திக்க வேண்டியிருக்கும்” என காட்டமாக தெரிவித்துள்ளார்.
Next Story
இயக்குநர் கவுதமன் திடீர் கைது!
தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவிலின் உட்கோட்டத்திலிருக்கிறது குறிஞ்சாங்குளம் கிராமம். கடந்த 1992 மார்ச் 14 அன்று இங்கு இரு பிரிவினருக்குள் ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகொலையானார்கள்.
ஊர் பொது மைதானத்தில் காந்தாரி அம்மன் சிலை வைப்பது தொடர்பாக மூண்ட விவகாரத்தில் பிரச்சனை கிளம்பியதால் இந்தச் சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அன்றிலிருந்தே விவகாரம் அவ்வப்போது தொடர்ந்திருக்கிறது. 2016ன் போது மண்சிலையான காந்தாரி அம்மனை எடுத்துவிட்டு கற்சிலை அமைக்க முற்பட்டபோது அரசின் வருவாய்த்துறையினர் தலையிட்டு சிலையைக் கையகப்படுத்தி அரசு பாதுகாப்பில் வைத்தனர்.
இந்தநிலையில் அண்மையில் பொங்கல் விழாவின் பொருட்டு மைதானத்தில் விளையாட்டு போட்டி நடப்பதற்கான முயற்சிகளை ஒருதரப்பினர் மேற்கொண்டபோது இருபிரிவினருக்குமிடையே மீண்டும் விவகாரம் மூண்டு பதற்ற சூழலானது. மாவட்ட எஸ்.பி.யான கிருஷ்ணராஜ், ஏ.டி.எஸ்.பி.ராஜேந்திரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தினார்கள். மார்ச் 14 அன்று படுகொலையானவர்களின் நினைவு தினம் வருவதால் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே குறிஞ்சாங்குளம் கிராமத்திற்கு உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு இன்று மார்ச் 14ல் அங்கு செல்வதற்காக தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரான கவுதமன் காலை 7.10 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையம் வந்திறங்கினார். 144 தடையை மீறி அஞ்சலி செலுத்துவதற்காக வந்த கவுதமனை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.