Skip to main content

65 லட்சம் ரூபாய் அபேஸ்... மாந்திரீக தம்பதி கைது

Published on 01/04/2023 | Edited on 01/04/2023

 

nn

 

திண்டுக்கல் அருகே மாந்திரீகம் செய்வதாகச் சொல்லி 65 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த மாந்திரீக தம்பதி உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் அருள் மணிகண்டன். இவருக்கு திடீரென மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக அருள் மணிகண்டனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

 

மாந்திரீகம் செய்தால் பலன் கிடைக்கும் என அருள் மணிகண்டனின் மனைவியிடம் தேவதானபட்டியை சேர்ந்த ஜோதிடர் சந்திரசேகரன் மற்றும் அவரது மனைவி விஜி ஆகியோர் மூளைச்சலவை செய்து கொஞ்சம் கொஞ்சமாக 65 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளனர். தொடர்ந்து பல்வேறு பூஜைகளை செய்தும் அருள் மணிகண்டனின் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 

 

இதைத் தொடர்ந்து அருள் மணிகண்டனின்  மனைவி மாந்திரீக தம்பதியிடம் இதுகுறித்து கேட்ட பொழுது கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் மாந்திரீக தம்பதி உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்