Skip to main content

கடப்பாவில் இறந்த 5 தமிழர்கள் விவரம்!

Published on 19/02/2018 | Edited on 19/02/2018
katappa tamilar murder

 

சேலம் மாவட்டம் கருமந்துறை அருகிலுள்ள கிளாக்காடு பகுதியை சேர்ந்த முருகேசன், ஜெயராஜ், முருகேசன், கருப்பண்ணன், சின்னப்பையன் ஆகியோர் ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் அருகில் உள்ள வனப்பகுதியில் இருக்கும் குட்டையில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக போலீசார் 18 ந்தேதி காலை அறிவித்தனர்.

 

இறந்த 5 பேர் மீது கடப்பா மாவட்டம், வாண்ட்டிமிட்டா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

மலைவாழ் மக்களான இவர்கள் வாழப்பாடி கோட்டத்துக்கு உட்பட்ட கருமந்துரை கிராமத்தை சேர்ந்தவர்கள்.  இதில் இறந்த சின்னதம்பி மகன் முருகேசனுக்கு உண்ணமலை என்கிற மனைவியும், பழனியம்மாள், மீனா, ரோஜா என்கிற மகள்கள் உள்ளனர். இதில் ரோஜாவுக்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

 

சின்னையன் மகன் கோவிந்தராஜுக்கு கருயா என்கிற மனைவியும், வனிதா என்கிற 3 வயது பெண் குழந்தையும், தினேஷ் என்கிற 5 மாத கைக்குழந்தை உள்ளது. 

 

அண்ணாமலை மகன் முருகேசனுக்கு பழனியம்மாள் என்கிற மனைவியும் மணிகண்டன், அசோக், ஐஸ்வரியா என 3 பிள்ளைகளும் உள்ளனர்.

 

பொன்னுசாமி மகன் கருப்பண்ணனுக்கு 23 வயதாகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை.  அம்மா பார்வதி, செல்வி, மணி என உடன் பிறந்தவர்கள் உள்ளனர். 

 

ஆண்டி மகன் சின்னப்பையனுக்கு கண்ணம்மாள் என்கிற மனைவியும், சந்தோஷ், சதிஷ், சிவனேசன் என்கிற மகன் கள் உள்ளனர். 

 

அவர்களது உடல்கள் கடப்பாவில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் வந்தால் மட்டுமே உடல் ஆய்வுக்கூறு நடக்கும், நான்கு நாட்களுக்குள் வரவில்லை என்றால் உடல் ஆய்வுக்கூறு நடத்தி முடிக்கப்பட்டு வைக்கப்படும் என்கின்றனர். 

 

இறப்பில் சந்தேகம் உள்ளதாக ஆந்திரா மனித உரிமை ஆர்வலர்கள் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மருத்துவமனை முன்பு அதிரடிப்படை போலிஸார் குவித்து வைத்துள்ளனர்.

 

உண்மையில் செம்மரம் வெட்ட வந்தவர்களா ?, அவர்கள் இறப்பில் சந்தேகம் உள்ளது. அதனால் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளத்தில் 2000 பேர் பலி; சர்வதேச உதவியைக் கோரும் லிபியா

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

Libya appeals for international aid for 2000 people died in the flood

 

வடக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் நாடு லிபியா. ஆப்பிரிக்க நிலப்பரப்பின் அடிப்படையில் 4வது நாடாக இருந்தாலும், இங்கு வாழும் மக்களின்  எண்ணிக்கை மிகக் குறைவு. இந்த நிலையில், மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை (10-09-23) டேனியல் புயல் தாக்கியது. குறிப்பாக லிபியாவின் கிழக்கு பகுதிகளைக் கடும் புயல் மற்றும் மழை தாக்கியுள்ளது. இதனால், டெர்னா, பெங்காஸி, பெடா உள்ளிட்ட பல பகுதிகளில் மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

கனமழை காரணமாக டெர்னா பகுதியில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்துள்ளன. சில அணைகள் இடிந்தும் விழுந்துள்ளன. இந்த வெள்ளத்தில் குறைந்தது 2000 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பல ஆயிரம் பேர் இதில் மாயமாகி இருக்கலாம், எனவே அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

இப்பகுதியில் போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்டவை தடைப்பட்டிருப்பதால், மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. கிழக்கு லிபியாவில் இந்த வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து மாறுபட்ட தகவல்களும் வெளியாகி வருகிறது. வெள்ளம் பாதித்த டெர்னா நகரைப் பேரழிவு மண்டலமாக அந்நாட்டுப் பிரதமர் ஹமாட் அறிவித்துள்ளார். மேலும், நாடு முழுவதும் உள்ள கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடவும் உத்தரவிட்டுள்ளார். 

 

பாதிப்பு மிக மோசமாக இருக்கும் பகுதியான கிழக்கு சிரேனைக்கா மாகாணத்தில் மூன்று பகுதிகளை வெள்ளம் காரணமாக பேரழிவுப் பகுதியாக அறிவித்து சர்வதேச உதவியைக் கோரியுள்ளதாக லிபியா ஜனாதிபதி கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, லிபியா பிரசிடென்சி கவுன்சிலின் தலைவர் மொஹமட் மென்ஃபி, வெள்ளத்தால் ஏற்பட்ட பரவலான பேரழிவைச் சமாளிக்க சர்வதேச உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதில் அவர், "சகோதர மற்றும் நட்பு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆதரவை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

 

 

Next Story

இலங்கையில் குறையும் தமிழர்களின் எண்ணிக்கை; அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

 Declining number of Tamils ​​in Sri Lanka; The statistics are shocking

 

இலங்கையில் பூர்வீகத் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இலங்கையில் தொடர்ச்சியாக நடைபெற்ற இனப் பிரச்சனையால் நேரிட்ட போர், அதன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள், அதன் காரணமாக ஏற்பட்ட இடம்பெயர்தல் ஆகிய காரணங்களால் அகதிகளாக மக்கள் தொடர்ந்து வெளியேறி வருவதால் அங்குள்ள தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

 

இது இலங்கை அரசு வெளியிட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களில் தெளிவாகத் தெரிகிறது. கிழக்கு மாகாணத்தில் சிங்களர், இஸ்லாமியர்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்திற்கு தமிழ் மக்களின் மக்கள் தொகை இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

 

இலங்கையில் தமிழர்களை பொறுத்தவரை மூன்று பிரிவுகளாக பார்க்கப்படுகிறது. ஈழத்தமிழர், மலையகத்தமிழர், தமிழ் பேசும் இஸ்லாமியர் என குறிப்பிடப்படும் வகையில் 1881 ஆம் ஆண்டு 24.9 சதவீதமாக இருந்த தமிழர்களின் எண்ணிக்கை 2012-ல் 11.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. திரிகோணமலையில் 1881-ல் 64.8 சதவீதமாக இருந்த தமிழர்களின் எண்ணிக்கை 2012-ல் 32.3 எனப் பாதியாகக் குறைந்துள்ளது. அதேபோல் அம்பாறை மாவட்டத்தில் 1963-ல் 28.8 சதவீதமாக இருந்த தமிழர்கள் எண்ணிக்கை 2012-ல் 17.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.