Skip to main content

18 MLAக்கள் தீர்ப்பு குறித்து கவலையில்லை; 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் : ஸ்டாலின் பேட்டி

Published on 25/10/2018 | Edited on 25/10/2018
mkstalin



“18 MLA-க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு குறித்து எங்களுக்கு கவலையில்லை; மக்கள் பிரதிநிதிகள் இல்லாத தமிழகத்தின் 20 தொகுதிகளுக்கும் உடனடியாக இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 
 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.  
 

செய்தியாளர்: 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் அறிவிப்பு செல்லும் என்றும் இடைத்தேர்தல் நடத்துவதற்கும் தடையில்லை என்று கூறியிருப்பது பற்றி உங்களின் கருத்து?
 

ஸ்டாலின்: தி.மு.கழகத்தைப் பொறுத்தவரையிலே ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். ஜனநாயகத்தினுடைய நெறிமுறைகள் போற்றிட வேண்டும் என்பது தான் தி.மு.கழகத்தினுடைய கொள்கை. சென்னை உயர்நீதிமன்றத்தினுடைய தீர்ப்பு இன்று வெளிவந்திருக்கிறது. அந்தத் தீர்ப்பை பொறுத்தவரையிலே, அ.தி.மு.கவின் ஒரு அணிக்கு சாதகமா? இன்னொரு அணிக்கு பாதகமா? என்பது அவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை. எனவே, அதுபற்றி தி.மு.கழகம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும், ஏற்கனவே திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதியினுடைய மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட முடியாத நிலையில் அந்த இரண்டு தொகுதிகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. ஆகவே, அந்த இரண்டு தொகுதிகள் மட்டுமல்ல இன்றைக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலே 18 தொகுதிகளும் மக்கள் பிரதிநிதி இல்லாத சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. எனவே, 18-ம் ஏற்கனவே இருக்கக்கூடிய இந்த 2 தொகுதிகளையும் சேர்த்து 20 தொகுதிகளுக்கு உடனடியாக தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துவதற்கு முன்வர வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் வலியுறுத்தி, வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
 

காரணம் அந்த தேர்தலைப் பொறுத்த வரையில் இன்றைக்கு இருக்கக்கூடிய மக்கள் தி.மு.கழகத்திற்கு பெருவாரியான வகையில் ஆதரவு தர தயாராக காத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, உடனடியாக இந்தத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.
 

செய்தியாளர்: 18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பை எதிர்பார்த்து தான், திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லையா?
 

ஸ்டாலின்: நாங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை, எதைப் பற்றியும் கவலைப்படவும் இல்லை, எந்த நேரத்திலும் மக்களை சந்திப்பதற்கு தி.மு.கழகம் தயாராக இருக்கிறது. இவ்வாறு கூறினார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.