Skip to main content

18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு.. அரசுக்கு ஊதிய சங்கு- திவாகரன் பேட்டி

Published on 25/10/2018 | Edited on 25/10/2018

 

thivagaran

 

அ.தி.மு.கவில் வெற்றி பெற்று அ.ம.மு.கவில் இணைந்துள்ள 18 எம்.எல்.க்களும் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் கொடுத்த மனுவுக்காக கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக சபாநாயகரால் நீக்கம் செய்யப்பட்டனர். அது தொடர்பான வழக்கில் இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் சபாநாயகர் உத்தரவு செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இது தொடர்பாக பலரும் கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில்.. அண்ணா திராவிடர் கழகம் பொதுச் செயலாளர் திவாகரன் மன்னார்குடியில் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் பொழுது

 

சபாநாயகர் எடுத்த ஒருதலைபட்சமான முடிவை நீதிமன்றம் உத்தரவாக சொல்லி இருக்கிறது. கட்சி கொறடா உத்தரவையும் மீறி ஒ.பி.எஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் கட்சி கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்து வாக்களித்தார்கள். இன்று அவர்கள் ஆட்சி பொறுப்பில் இருக்கிறார்கள். ஆனால் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று மனு கொடுத்தவர்களை நீக்கி இருப்பது ஒருதலைப்பட்சமானது தான்.

 

இப்போதைய சூழ்நிலையில் 20 தொகுதியிலும் இடைத் தேர்தல் வந்தால் ஒ.பி.எஸ். – எடப்பாடி தலைமையில் இயங்கும் அ.தி.மு.க ஒரு இடம் கூட பிடிக்க முடியாது. மாயவித்தைகளை காட்டி எம்.எல்.ஏக்களை இழுத்து சென்றார் தினகரன். அவர்களிடம் அனுசரித்து பேசி இருந்தால் பிரச்சனை தீர்வுக்கு வந்திருக்கும். அதை செய்யாததால் அ.தி.மு.க கோட்டையில சிதைவு ஏற்பட்டுள்ளது. 

 

தீர்ப்பை வரவேற்று அ.தி.மு.க தொண்டர்கள் புரியாமல் வெடிவெடித்து கொண்டாடி வருகிறார்க்ள. அதைப் பார்த்து எனக்கு சிரிப்பு தான் வருகிறது. இந்த தீர்ப்பு அரசுக்கு ஊதிய சங்கு என்பது அவர்களுக்கு தெரியவில்லை. அ.தி.மு.கவுக்கு இது கடுமையான காலகட்டமாக உள்ளது.

 

பொதுச்செயலாளரை சிறைக்கு அனுப்பிய மகா உத்தமர் தினகரன் அவர் எல்லாம் சொல்வார். ஆனால் அவரை நம்பி 18 அப்பாவிகள் பலிகடாக்களாகிவிட்டார்கள். ஒ.பி.எஸ், அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னிடம் பேசினார்கள் என்பதை வெளியே சொல்வது நாகரீகம் இல்லை. தற்போது அ.தி.மு.க, அ.ம.முக.வுக்கு இடைத்தேர்தலில் வாய்ப்புகள் இல்லை. எதிர்கட்சிகளுக்குதான் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 

 

18 எம்.எல்.ஏக்களும் மேல்முறையீடு என்று போகாமல் தேர்தலுக்கு தயாராவதுதான் சரியானதாக இருக்கும். இந்த பிரச்சனையை உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு காலங்கடத்துவதைவிட மக்கள் மேல வைத்துள்ளது  தினகரன் டிராமா கூட்டம். ஆறுகளில் தண்ணீர் அதிகமாக வெள்ளப் பெருக்கு வரப்போகிறது. அவற்றை சரிசெய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் தயாராக இல்லை. ஆனால் மணல் அள்ளுபவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது என்றார். 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.