Skip to main content

சென்னை செம்மஞ்சேரியில் 1000 கிலோ குட்கா பறிமுதல்! 3பேர் கைது!

Published on 01/08/2018 | Edited on 01/08/2018

 

kutka

 

 

 

சென்னை செம்மேஞ்சேரியில் 1000 கிலோ குட்கா பறிமுதல் செய்யபட்டுள்ளது.

சென்னை அடையாறு போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சுற்றுவட்டார பகுதியில் குட்கா புழக்கம் இருப்பதாக தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்போது செம்மஞ்சரி பகுதியில் தாழம்பூரில் உள்ள ஒரு குடவுனில் மேற்கொண்ட சோதனையில் 1000 கிலோ குட்கா மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக ஜெயராஜ், மஞ்சுநாத், வடிவேல் ஆனந்த்  என மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்