Skip to main content

''இதனால்தான் தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என்று அண்ணா சொன்னார்''-மு.க.ஸ்டாலின் பேச்சு!

Published on 25/01/2022 | Edited on 26/01/2022

 

That is why Anna said that Hindi has no place in Tamil Nadu '' - MK Stalin's speech!

 

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், திமுக மாணவரணி சார்பில் வீர வணக்க நாள் கூட்டம் இன்று தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. காணொளி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  ''தாளமுத்து நடராஜன் என்ற பெயரில் மாபெரும் மாளிகையை எழும்பூரில் அமைத்து பெருமை சேர்த்தார் கலைஞர். 1938-ல் தொடங்கிய போராட்டம் 1940-ஆம் ஆண்டு இந்தி கட்டாயம் இல்லை என அறிவிக்கப்படும் வரைக்கும் நடைபெற்றது. 1948 ஆம் ஆண்டு மீண்டும் இந்தி திணிக்கப்பட்டது. அப்போதும் பெரியாரும், அண்ணாவும் போர்ப்பரணி பாடினார்கள். இரண்டு ஆண்டுகாலம் அந்த போராட்டம் நடந்தது. 1963ஆம் ஆண்டு மீண்டும் இந்தி ஆதிக்கம் தலைவிரித்தாடியது. அண்ணாவும், கலைஞரும் அமைத்த போர்க்களம் என்பது இரண்டு ஆண்டுகாலம் தமிழகத்தில் நீடித்தது.

 

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினரும் பங்கெடுத்து சிறை சென்றார்கள். ஆறு மாதம் முதல் அதிகபட்சம் ஒன்றரை ஆண்டுகள் வரை சிறையில் வாடினார்கள். மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கைதான திமுகவினர் ஓராண்டு சிறை தண்டனை பெற்றார்கள். காஞ்சி, குமரி, கோவை, சென்னை ஆகிய ஊர்களில் கைதானவர்கள் 6 மாத கால சிறை தண்டனை பெற்றார்கள். மற்ற மாவட்டங்களில் கைதானவர்கள் 3 மாதம் முதல் 6 மாதம் வரை தண்டனை பெற்றார்கள். திமுக முன்னணி செயல் வீரர்கள் அனைவரும் சிறைப்பட்டார்கள். இதுதான் தமிழ்நாட்டினுடைய மொழி போராட்டத்தின் வரலாறு. இந்த இரண்டு ஆண்டுகால எழுச்சிதான் 1965 ஆம் ஆண்டு மாணவர் சமுதாயத்தை மாபெரும் கிளர்ச்சிக்கு தயாராக்கியது. தங்களது உடலில் தாங்களே தீ வைத்து கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், ஆசிரியர் வீரப்பன், கீரனூர் முத்து, சாரங்கபாணி போன்றோரும், அமுதம் அருந்துவது போல விஷமருந்தி மறைந்த தண்டாயுதபாணி, முத்து, விராலிமலை சண்முகம் போன்றோரும் மொழிக்காக தங்கள் உயிரையே தந்தார்கள். இன்றைக்கு படங்களாக இருந்து நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீரர்கள். மொழி போர்க்களத்தின் முதல் தியாகி கீழப்பழுவூர் சின்னச்சாமி. இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தொண்டன். தனது மகளுக்கு திராவிடச் செல்வி என்று பெயர் சூட்டி இருந்தார் சின்னச்சாமி.

 

சென்னை கோடம்பாக்கத்தில் தீக்குளித்த சிவலிங்கம் அவருடைய வயது 21. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டராக நுங்கம்பாக்கம் பகுதி கழகத்தின் பொருளாளராக இருந்து பணியாற்றி இருக்கிறார். தீக்குளித்த விருகம்பாக்கம் அரங்கநாதன் ஒன்றிய அரசினுடைய தொலைப்பேசி துறையில் ஊழியராக பணியாற்றியவர் அவரும் திமுகவின் தொண்டர் தான். சத்தியமங்கலம் முத்து என்கின்ற திமுக தொண்டர் தீக்குளித்தார். அவருக்கு வயது 22.  ஐயம்பாளையம் ஆசிரியர் வீரப்பன் தீக்குளித்தார். அவரும் திமுகவைச் சார்ந்தவர் தான். 22 வயதான விராலிமலை சண்முகம் திமுகவின் தொண்டர். திருச்சி பாலக்கரையில் 16 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பாலத்துக்கு கீழப்பழுவூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகியோர் நினைவாக சின்னசாமி-சண்முகம் பாலம் என்று பெயர் சூட்டினார் கலைஞர்.

 

மொழிப்போர் தியாகிகளால் தமிழினம் மேன்மை அடைந்துள்ளது. மொழிப்போர் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைத்தவர் கலைஞர். அதனால்தான் 1967ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் அத்தகைய உணர்வோடு அண்ணா அதற்காகவே இந்த ஆட்சியை நடத்திக் காட்டினார். மாணவர்களின் தாகத்தை மதிக்கக் கூடிய வகையில் இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்றும் அண்ணா அறிவித்தார். 'தமிழும்-ஆங்கிலமும்' என்ற இரு மொழிக் கொள்கையைச் சட்டமாக்கினார் அண்ணா'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.