Skip to main content

வேட்பாளரை அறிவித்தார் சீமான்...

Published on 08/07/2019 | Edited on 08/07/2019

 

வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 

இந்த நிலையில் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். சீமான் விடுத்துள்ள அறிக்கையில், நடக்கவிருக்கிற வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கானத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி போட்டியிடுவார் என்று கூறியுள்ளார். 


  seeman


திமுக வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் மகன் கதிர் ஆனந்த், அதிமுக வேட்பாளராக ஏ.சி.சண்முகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 
 

வேலூர் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ஜூலை 11 முதல் 18ஆம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம். ஜூலை 19ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்ப பெற ஜூலை 22ஆம் தேதி கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. 


 

சார்ந்த செய்திகள்