Skip to main content

லட்சம் கோடி சொத்து கொண்ட கோடீஸ்வரா் சாமி கோவிலில் எலும்பும் தோலுமாக காணப்படும் பசுக்கள்

Published on 18/07/2019 | Edited on 18/07/2019

 

         திருப்பதி வெங்கடாசலபதியின் சொத்துக்களையும் மிஞ்சி பல லட்சம் கோடி சொத்துக்களை கொண்டது தான் திருவனந்தபுரம் பத்மனாபசாமி கோவில். இந்த கோவிலின் தங்க வைர ஆபரணங்கள் கோவிலில் பூட்டப்பட்டு இருக்கும் நான்கு அறைகள் மற்றும் தெப்பகுளத்தின் பாதள அறைகளிலும் மலை போல் குவிந்துள்ளன. மேலும் இந்த கோவிலுக்கு நாடு முமுவதும் இருந்து தினந்தோறும் ஆயிரகணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனர். 

 

cow


         இந்த கோவிலுக்கு சொந்தமான 19 பசுக்கள் மற்றும் 17 கன்று குட்டிகள் கொண்ட கோசலையை டிரஸ்ட் ஓன்று பராமரித்து வருகிறது. இந்த பசுக்களின் இருந்து வரும் பாலைக் கொண்டு தான் பத்மனாபசாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்குள்ள பசுக்கள் இந்தியாவிலேயே மருத்துவ குணம் கொண்ட பாலை சுரக்கும் கிர் இன வகையை சார்ந்தது.


              இந்த நிலையில் அந்த கோசலையில் உள்ள பசுக்களுக்கு தீனி எதுவும் கொடுக்காமல் மேலும் மருத்துவ சிகிச்சையும் இல்லாமல் நோய் வாய்பட்டு கிடப்பதாகவும் பக்தா்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை தொடா்ந்து கேரளா தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி  சுரேந்திரன் மற்றும் தேவசம் போர்டு அதிகாரகள் நேரில் சென்று விசாரித்தனர். 


            அப்போது பசுக்கள் எல்லாம் எலும்பும் தோலுமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் பல பசுக்கள் நோய் வாய்பட்டு படுத்த படுக்கையாக கிடந்தன. அங்குள்ள பசுக்கள் தினமும் 15 லிட்டா் பால் கொடுத்து வந்த நிலையில் தற்போது 4 லிட்டா் பால் தான் கொடுக்கிறது. அதே போல் இந்த பசுக்களை பராமரிப்பதற்காக ஆன்லைன் மூலம் வசூல் வேட்டை நடத்தியதையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


          இந்த நிலையில் டிரஸ்ட் பராமரிப்பில் இருந்து கோசலையை மீட்டு கோவில் நிர்வாகம் பராமரிக்க வேண்டும் என்று பாஜக வினா் போர்க்கொடி தூக்கியுள்ளனா். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.