Skip to main content

“ஏழை மக்களின் வரிப்பணத்தை சொந்தமாக்கி கொள்வது தவறு” - பாரிவேந்தர்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Taking tax money from poor people is wrong says Paarivendhar

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தர் திமுக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்பு திமுக கூட்டணியில் இருந்து விலகிய பாரிவேந்தர் தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதே பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

இந்த நிலையில் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பாரிவேந்தர், “கடந்த 5 ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது மத்திய அரசு வழங்கிய ரூ. 17.5 கோடி முழுவதும் மக்கள் நலப்பணிக்கு செலவிடப்பட்டது. இதில் பெரம்பலுாருக்கு ரூ. 3.37 கோடி, லால்குடிக்கு ரூ.3.32 கோடி, மண்ணச்சநல்லுாருக்கு ரூ.2.80 கோடி, துறையூருக்கு  ரூ.3.79 கோடி, முசிறிக்கு ரூ.2.40 கோடி, குளித்தலைக்கு ரூ. 2.73 கோடி செலவிடப்பட்டது. இதில் பெரும்பகுதி தொகை அரசு பள்ளி மாணவர்களுக்கான வகுப்பறைகள், கழிவறை, நீர்த்தொட்டிகள் கட்டப்பட்டது. இது தவிர எனது சொந்த செலவில் ரூ. 126 கோடி பெரம்பலுார் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டிற்கு செலவிடப்பட்டுள்ளது. பெரம்பலுார் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் எஸ்.ஆர்.எம் கல்லுாரிகளில் கல்வி கற்பதற்கு, உறைவிடம் ஆகியவற்றுக்கு மட்டும் ரூ. 118 கோடி செலவிடப்பட்டது. கரோனா காலத்தில் 2 ஆம்புலன்ஸ், மருத்துவமனைக்கு படுக்கைகள், ஆக்ஸிஜன் உற்பத்தி கருவிகள் வழங்கப்பட்டது. பல கோயில்களை புனரமைப்பதற்காக ரூ. 4கோடியே 80 லட்சம் வழங்கப்பட்டது.

சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர், சிறுகனுார், இருங்களூர் ஆகிய ஊர்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. கோடை காலங்களில் பெரம்பலுார் உள்ளிட்ட பகுதிகளில் நீர்த்தேவைகள் நிறைவேற்றப்பட்டது. காமராஜர் ஆட்சியில் திட்டமிடப்பட்ட துறையூர், பெரம்பலுார், அரியலுார், நாமக்கல் ஆகிய  பகுதிகளை ரயில்வே பாதை மூலம் இணைக்கும் பணிக்கான மறு ஆய்வு சமீபத்தில் நடந்துள்ளது. ஆயிரம் கோடி மதிப்பிலான  இந்த  திட்டம் நிறைவேற்றப்பட்டால், இந்த பகுதிகள் மேம்பாடு அடையும். 2025ம் ஆண்டிற்குள் இந்த ரயில் பாதை மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என ரயில்வே துறை உறுதியளித்துள்ளது. பாராளுமன்றத்தில் 268 கேள்விகள், 39 பங்கேற்ற விவாதங்களில் பங்கேற்றேன். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் பாஜ கட்சி கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன். ஏழை மக்கள் கட்டும் வரிப்பணத்தை தங்களுக்கு சொந்தமாக்கி கொள்வது தவறானது. சிங்கப்பூர், லண்டன் உள்ளிட்ட பல நாடுகளில் திமுகவினர் லஞ்சப் பணத்தை முதலீடு செய்துள்ளனர். தங்களுக்கு சாதகமாக இல்லாத தொலைக்காட்சியை செயலாற்ற விடுவதில்லை. அரசாங்கத்தில் எந்த செயல் நடக்க வேண்டும் என்றாலும் லஞ்சம் தர வேண்டிய நிலைமை உள்ளது. தங்கள் குடும்பமே ஆட்சி செய்ய வேண்டும் என்ற பதவி வெறி வந்தவுடன் நேர்மை மறைந்து விட்டது.

தேர்தலில் அனைத்துக் கட்சியினரும் தனியாக நின்றால்தான் சொந்த பலம் தெரிய வரும். அரசியலுக்கு வருபவர்கள் ஆதாயம் நினைத்து வரக் கூடாது என அண்ணா சொன்னதை திமுகவினர் மறந்து விட்டனர். அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் கலைஞர் பெயரை வைப்பது எவ்விதத்தில் நியாயம். இதுபோல செய்தால் மக்களுக்கு அலுப்பு வந்துவிடும். உங்கள் சொந்தக் கட்சி செலவில் எதுவேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். விளம்பரத்தால் மட்டுமே வாழ முடியாது. காமராஜர் எந்த திட்டத்திற்கும் தனது பெயரை வைக்க விரும்ப மாட்டார். திமுகவிடம் தேசிய பார்வையில்லாததால் அந்த அணியிலிருந்து நான் விலக நேரிட்டது. இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தேசிய பார்வை இருக்க வேண்டும்” என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா செயலிழப்பு; ஈரோட்டில் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Strong room CCTV camera malfunction; Sensation in Erode

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின.

Strong room CCTV camera malfunction; Sensation in Erode

இதனையடுத்து வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று முன்தினம் (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாட்டுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். 

Strong room CCTV camera malfunction; Sensation in Erode

இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிர்ஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.