Skip to main content

“பா.ஜ.க ஆட்சியை அகற்ற இரண்டாவது சுதந்திர போராட்டத்திற்கு மக்கள் தயாராகி விட்டார்கள்” - அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
People are ready for second freedom struggle to remove the BJP regime says Minister I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி  சார்பாக போட்டியிடும் சி.பி.எம்.கட்சி வேட்பாளர் தோழர் சச்சிதானந்தத்தை  ஆதரித்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான சிலுவத்தூர் எஸ்.எம்.பி. பள்ளி, குமரன் திருநகர், அண்ணா நகர், விவேகானந்தன் நகர், காட்டாஸ்பத்திரி,  பஸ்ஸ்டாண்டு, கிழக்கு ஆரோக்கியமாதா தெரு, மெங்கில்ஸ்ரோடு. பெல்பர்க்  ரோடு, என்.வி.ஜி. தியேட்டர் நாகல்நகர் உட்பட 14 இடங்களில் தேர்தல் பிரச்சாரம்  நடைபெற்றது.

அப்போது ஒய்எம்ஆர்பட்டியில் உள்ள முருகன் கோவிலில்  அமைச்சர் ஐ.பெரியசாமி உடன் வேட்பாளர் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது அங்குள்ள கோவில் பூசாரி அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கும் பரிவட்டம் காட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதை தொடர்ந்து அதன் அருகே  உள்ள டீக்கடைக்கு சென்ற அமைச்சர் ஐ.பெரியசாமி பிட் நோட்டீசுகளை அப்பகுதியில் உள்ள மக்களுக்கு கொடுத்துவிட்டு டீக்கடைக்குள் வேட்பாளர் சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், மேயர்  இளமதியுடன் உட்கார்ந்து டீ குடித்துவிட்டு அங்குள்ளவர்களிடம் அரிவாள்  சுத்தியலுக்கு வாக்கு சேகரித்துவிட்டு சென்றார்.

People are ready for second freedom struggle to remove the BJP regime says Minister I. Periyasamy

இந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு அமைச்சர்  ஐ.பெரியசாமி தலைமை தாங்கினார். பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு  மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார், முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர் தோழர்பாலபாரதி, தோழர் பாண்டி, திண்டுக்கல் மேயர்  இளமதிஜோதி பிரகாஷ், துணை மேயர் இராஜப்பா, ஒன்றிய செயலாளர்  நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் கிழக்கு பகுதி  செயலாளர் ராஜேந்திரகுமார் வரவேற்று பேசினார்.

இந்த பிரச்சாரத்தின் போது  பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, “இந்தியா  முழுவதும் மக்கள் மத்தியில் ஆளும் பா.ஜ.க.கட்சியை அகற்ற 2ஆவது சுதந்திர  போராட்டத்திற்கு தயாராகி விட்டார்கள். அதற்கு காரணம் ஜி.எஸ்.டி.  வங்கிகளில் பண பரிமாற்றம் செய்தால் அதற்கு கமிஷன், அன்றாடம்  பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய உணவு பொருட்களுக்;கு கூட அதிகவரி, உள்ளிட்ட பல காரணங்களால் மோடி தலைமையிலான பா.ஜ.க. கட்சியை விரட்ட தயாராகிவிட்டார்கள். திராவிட மாடல் ஆட்சிநாயகன் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் திண்டுக்கல் மாநகருக்கு எண்ணற்ற நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

People are ready for second freedom struggle to remove the BJP regime says Minister I. Periyasamy

குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் ரூ.550 கோடியில் திண்டுக்கல் மாநகர மக்களின் குடிதண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர  தீர்வு காணும் வண்ணம் வைகை அணையில் இருந்து குழாய்கள் மூலம் குடி  தண்ணீர் கொண்டு வரப்பட உள்ளது. திண்டுக்கல் மாநகருக்கு பேரணை, ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம், காவிரி கூட்டுக்குடிநீர் தற்போது வைகையில்  இருந்து கூட்டுக்குடிநீர்; கொண்டுவரப்பட உள்ளது. திமுக ஆட்சியின் போது தான்  திண்டுக்கல்லுக்கு மேம்பாலங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல  வேண்டும் என்றால் நாகல்நகர் ரயில்வே நிலைய மேம்பாலம், திருச்சி சாலை மேம்பாலம், கட்டிக்கொடுக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமமின்றி செல்லும் நிலைமை உருவானது. இது போல நாகல்நகர் பகுதியில் வசிக்கும் கைத்தறி நெசவாளர்களான சௌராஷ்டிரா மக்களின் நலன் கருதி பாரம்பரிய கோவிலினை காப்பாற்றி கொடுத்ததோடு கைத்தறி நெசவாளர்களுக்கும்  இலவச மின்சாரம் தந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த அதிமுக அரசு கைத்தறி நெசவாளர்களை காக்க  தவறிவிட்டது. தற்போது தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடத்தும் தமிழக  முதல்வர் முக ஸ்டாலின்  கைத்தறி நெசவாளர்களை காப்பாற்ற  திண்டுக்கல்லை சுற்றி நெசவுபூங்கா அமைப்பதுடன் அவர்களுக்கான  கூலியையும் உயர்த்தி கொடுத்துள்ளார் என்றார். பாராளுமன்ற தேர்தலுக்கு  பிறகு திண்டுக்கல் மாநகர மக்களின் நலன் கருதி திண்டுக்கல்லில் இருந்து  சென்னைக்கு தனி ரயில் வசதி செய்து கொடுக்கப்படும். அந்த ரயில் திண்டுகல்லில் இருந்து புறப்படும். இதுபோல ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு விமான நிலையம் அமைய திமுக தலைமையிலான கூட்டணி உறுதியாக இருக்கும் என்றார். இங்கு சி.பி.எம். கட்சி சார்பாக பாராளுமன்ற தேர்தலில்  போட்டியிடும் வெற்றி வேட்பாளர் சச்சிதானந்தம் 24 மணிநேரமும்  மக்களுக்கான பணியாற்றக் கூடியவர் மண்ணின் மைந்தர் அவருக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள்  வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.