Skip to main content

சபாநாயகரிடம் கருணாஸ் எம்எல்ஏ மனு

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில்,  சென்னை வண்ணாரப்பேட்டையில் இன்று  4-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

Karunas



இந்த நிலையில் தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று (திங்கட் கிழமை) தொடங்குகிறது. கண்டன பதாகையுடன் தமிமுன் அன்சாரி சட்டப்பேரவை வருகை தந்தார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவை செயலகத்தில் தமிமுன் அன்சாரி மனு அளித்தார்.
 

இதேபோல் குடியுரிமை தொடர்பான CAA, NPR குறித்து விவாதிக்க இன்று காலை 10.30 மணிக்கு, சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மானத்தை நேரில் வழங்கினார் முக்குலத்தோர் புலிப் படை தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ். 
 


 

சார்ந்த செய்திகள்